முடிவில்லாமல் தொடரும் ரயில் விபத்துகள்

Viduthalai
1 Min Read

வாராங்கல், ஜூன் 27- ரயிலின் படுக்கை வசதி பெட்டியில் பயணித்த முதியவா் மீது நடு படுக்கை விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று (26.6.2024) அவா் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கேரளாவைச் சோ்ந்த அலிகான் (வயது 60) தனது நண்பா்களுடன் எா்ணாகுளம்- ஹஸ்ரத் நிஜாமுதீன் மில்லினியம் அதிவேக ரயிலில் ஆக்ராவுக்கு பயணித்தார். படுக்கை வசதி பெட்டியில் கீழ் இருக்கையில் இருந்த இருந்த முதியவா் மீது மேல் நடு படுக்கை கழன்று விழுந்தது. இதில் முதியவரின் கழுத்தில் பலத்தக் காயம் ஏற்பட்டது.

தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே காவல்துறையினா் முதியவரை மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தார். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனா்.
பயணி உயிரிழந்தது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் தங்களது தவற்றை ஒப்புகொள்ளாமல் பயணியின் கவனக்குறைவு என்று கூறி தங்கள் மீதான பொறுப்பை தட்டிக்கழித்துவருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *