வெளிநாடுகளில் சம்பாதித்து ரூ.9 லட்சம் கோடியை தாய்நாட்டுக்கு அனுப்புவதில் உலகளவில் இந்தியர்கள் முதலிடம்

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜூன் 27 வெளிநாடுகளில் வேலை செய்து தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவதில் இந்தி யர்கள் முதலிடத்தில் உள்ளனர். அவர்கள் 107 பில்லியன் டாலர்களை அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 லட்சம் கோடியை தத்தமது குடும்பங்களுக்கு அனுப்பிகின்றனர்.

வெளிநாடுகளில் கடினமாக உழைத்து சேர்த்து வைத்த பணத்தை இந்தியாவில் உள்ள தமது குடும்பங்க ளுக்கு அனுப்புவதில் இந்தியர்கள் எப்போதுமே முன்னிலையில் உள்ளனர். அந்தவகையில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இந்தியர்கள் அனுப்பும் பணம் 100 பில்லியன் டாலரை கடந்து சாதனை படைத்துள்ளது. 2023-2024 நிதியாண்டில் 107 பில்லியன் டாலரை அவர்கள் தாய்நாட்டுக்கு அதாவது இந்தியாவுக்கு அனுப்பியுள்ளனர்.

இது, இந்தியா ஈர்த்த அந்நிய நேரடி மற்றும் நிதி நிறுவன முதலீடுகளான 54 பில்லியன் டாலரை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்குப் பணம் அனுப்பும் மிகமுக்கிய ஆதாரமாக அமெரிக்கா உள்ளது.

2-ஆவது இடத்தில் மெக்சிகோ: வெளிநாடு வாழ் பணியாளர்கள் அதிக பணம் அனுப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவைத் தொடர்ந்து மெக்சிகோ (67 பில்லியன் டாலர்), சீனா (50 பில்லியன் டாலர்), பிலிப்பைன்ஸ் (40 பில்லியன் டாலர்), எகிப்து (24 பில்லியன் டாலர்) ஆகியவை உள்ளன.

கரோனாவால் பாதிப்பு: ரிசர்வ் வங்கி ஆய்வுப்படி, கரோனா தொற்றுக்குப் பிறகு வளைகுடா பிராந்தியத்தில் இருந்துவரும் பண வரத்து குறைந்துள்ளது. அதேநேரம், இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட மொத்ததொகையில் 23 சதவீதம் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளது. இந்தப் பணம் பெரும்பாலும் குடும்பத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதாகவும், ஒருபகுதி வைப்புத் தொகை போன்றபிற சொத்துகளில் முதலீடு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உயர் வருமான நாடுகளில் காணப்படும் பலவீனமான வேலைவாய்ப்பு சந்தை மற்றும் உலகபொருளாதார சுணக்கம் காரணமாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு அனுப்பப்படும் பண வளர்ச்சி விகிதம் 2024-இல் 3.1 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது.

பவானி கரையோர மக்களுக்கு
வெள்ள அபாய எச்சரிக்கை

பவானி, ஜூன் 27 தொடர் மழையின் காரண மாக பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 14,000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றங்க ரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பருவமழையின் தாக்கம் மேற்கு தொடர்ச்சி மலையான நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட் டத்தின் அப்பர் பவானி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

இந்த நிலையில், நேற்று காலை அதன் முழு கொள்ளளவான 97 அடியை எட்டியது. இதனை அடுத்து அணையின் பாதுகாப்பு கருதி காலை 5 மணியளவில் வினாடிக்கு 9ஆயிரம் கனஅடிவீதம் மேட்டுபாளையம் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 14,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டுபாளையம் பவானி ஆற்றின் கரையொரப்பகுதி மக்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து ஆற்றங்கரை பகுதிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *