சென்னை, ஜூன் 25- செவிலியர்கள் ஜெர்மன், ஜப்பான் உள் ளிட்ட வெளிநாடுகளில் எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வண்ணம் அவர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழிகளில் இலவசமாக பயிற்சி அளிக்க தமிழ்நாடு அரசு நிறுவனம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
முதல்முறையாக செவிலியர்க ளுக்கு ஜெர்மன், ஜப்பான் உள் ளிட்ட வெளிநாட்டு மொழிப் பயிற்சியை இலவசமாக அளிக்க அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் முயற்சி எடுத்துள்ளது. வெளிநாட்டு மொழியை கற்க விரும்பும் செவிலியர்கள் பிஎஸ்சி செவிலியர் அல்லது டிப்ளமா செவிலியர் படிப்பு படித்திருக்க வேண்டும்.
செவிலியர்களின் வசதியை கருத்தில்கொண்டு மொழிப் பயிற்சியானது இணைய வழி வாயிலாகவும், நேரடியாகவும் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர விரும் பும் செவிலியர்கள் முழு விவரங் களையும் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 6379179200 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.