கள்ளக்குறிச்சி விஷச் சாராயப் பிரச்சினை ரூபாய் ஒரு கோடி நட்ட ஈடு கோரி டாக்டர் ராமதாஸ், அன்புமணிக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கீது!

viduthalai
1 Min Read

கள்ளக்குறிச்சி, ஜூன் 25– கள்ளக்குறிச்சி நிகழ்வில் திமுக அரசு கடும் நடவடிக்கை எடுத்தும் கற்பனையாக, பொய்யாக அவதூறு பரப்புவதாக கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு எதி ராக, திமுக எம்.எல்.ஏ.க்கள் உதய சூரியன், வசந்தம் கார்த்திகேயன் இருவரும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக திமுக விடுத்துள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்கள் தொடர்பாக வெளி யிட்ட அறிக்கைகளுக்காகப் பாமக நிறுவனர் ராமதாஸ் மற் றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு திமுக எம்எல்ஏக்கள் உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் வழக்கறிஞர் தாக்கீது அனுப்பியுள்ளனர்.

அந்த தாக்கீதில் “ராம தாஸும், அன்புமணியும் இந்த தாக்கீதைப் பெற்றுக்கொண்ட 24 மணி நேரத்துக்குள், ஏதேனும் ஒரு முன்னணித் தமிழ், ஆங்கில நாளேட்டின் ஒரு பதிப்பின் வாயிலாகவும் தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களின் வாயிலாகவும் தங்களிடமும் கள்ளக்குறிச்சி மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குத் தலா ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தாக்கீதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்றோ வேறு வகையிலோ பொய்யான, ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று திமுக எம்எல்ஏக்கள் உதயசூரியன், வசந் தம் கார்த்திகேயன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *