கிரிவலம் முடித்துவிட்டு ஊருக்குத் திரும்பிய கருநாடக பக்தர்கள் பலி!
திருவண்ணாமலை, ஜூன் 23 திருவண்ணாமலை அணைக்கரை வட்ட சாலை அருகில் கருநாடகா பதிவெண் கொண்ட காரில் பக்தர்கள் சிலர் திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் முடித்துவிட்டு பெங்களூரு நோக்கிச் சென்றனர். திருவண்ணாமலை அடுத்த நல்லவன் பாளையத்திலிருந்து கீழ்நாத்தூர் நோக்கி இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் திருவண்ணாமலை நகருக்குள் சென்றனர்.
அணைக்கரை வட்ட சாலை அருகே காரும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே, முருகன் (வயது 36) சே.அகரம் செங்கம் தாலுக்கா, விஜயகாந்த் (வயது 32)கீழாத்தூர் ஆகிய இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
விபத்து நடந்த நேற்று முன்தினம் இரவு (21.6.2024) பவுர்ணமி கிரிவலம் என்பதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நகரத்துக்குள் வரும் 9 சாலைகளும் பெரும் சிரமத்தைச் சந்தித்தன. விபத்தால் புறவழிச்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
கூட்டத்தால் ஆம்புலன்ஸ் வர தாமதமானது. அதற்குள் இரு வரும் இறந்துவிட்டனர். இறந்த உடல்களை திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்து வக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை மேற்கு காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரிக்க தொடங்கினர். விபத்து நடந்த உடன் காரில் இருந்த ஓட்டுநர் தப்பி ஓடியிருந்தார். விபத்து நடத்திய காரின் ஓட்டுநர் யார்? அவர் எங்கே சென்றார் என்ற கோணத்தில் காவல் துறையினர் தேடி வருகின்றார்கள். காரின் உரிமையாளரை வரவைத்து விசாரணை நடத்துகின்றனர்.