பெங்களூரு, நவ. 19- கருநாடக மாநிலத்தில் காலியாக இருக்கும் 57 நீதிபதிகள் பணியிடங்களுக்கான சிவில் நீதிபதி தேர்வுகளை நடத் துவதற்கான அறிவிப்பை நீதி மன்றம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது.
அதன்படி, முதல்நிலை தேர்வு ஜூலை 23, 2023 அன்று நடை பெற்றது. இதில் 6,000க்கும் மேற் பட்டவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.
அவர்களில் 1,022 பேர் முதன் மைத் தேர்வுக்காக தேர்ந்தெடுக் கப்பட்டு பெங்களூருவில் அவர் களுக்கு நேற்றும் இன்றும் (18-, 19.11.2023) தேர்வு நடைபெறுகிறது.
இதற்கிடையே, கருநாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவைச் சேர்ந்த வழக்குரைஞர் நேத்ராவதி, முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற் றிருந்தார்.
ஆனால் அவர் கர்ப்பமாக இருப்பதால் பெங்களூரு சென்று தேர்வு எழுத இயலாத நிலையில், தனது சொந்த மாவட் டத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றப் பணி நியமன கமிட்டியின் நீதிபதிகள், அவரது விண்ணப் பத்தை பரிசீலித்து, தட்சிண கன்னடா மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதித்தனர். கமிட்டியின் முடிவுக்கு தலைமை நீதிபதி பிரசன்னா பி வரலே ஒப்புதல் அளித்தார்.
தேர்வில் பங்கேற்கும் விண்ணப் பதாரர் எட்டரை மாத கர்ப் பிணியாக இருப்பதால் அவரது சொந்த ஊரான மங்களூருவில் தேர்வு எழுத கருநாடக நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது போன்று சிறப்பு அனுமதி வழங்குவது இதுவே முதல் முறையாகும்.
கமிட்டி மற்றும் தலைமை நீதி பதியின் உத்தரவைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர் நேத்ராவதி மங் களூருவில் உள்ள மாவட்ட நீதி மன்றத்தில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக நீதித்துறை பெண் அதிகாரி ஒருவரை நீதிமன்ற பதிவாளர் நியமித்தார்.