அய்டிஅய்–யில் சேர நாளை வரை கெடு

1 Min Read

சென்னை, ஜூன் 6 அரசு அய்டிஅய்-களில் சேர நாளை (7.6.2024) வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது: அரசு அய்டிஅய்-க்களில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த மே 10-ஆம் தேதி முதல் ஆன்லைனில் (www.skilltraining.tn.gov.in) பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பக் கட்டணம் ரூ.50. இதை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் வாயிலாக இணைய வழியில் செலுத்தலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 7-ஆம் தேதி ஆகும்.

அரசு அய்டிஅய்-யில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.750 உதவித்தொகை, மடிக்கணினி, ஷூ, சீருடை, வரைபடக்கருவிகள், விடுதி வசதி, இலவச பேருந்து அட்டை ஆகியவை வழங்கப்படுகின்றன. எனவே, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசு அய்டிஅய்-யில் சேரலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *