ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு பிஜேபி கூட்டணி கட்சிகள் இந்தியா கூட்டணியை தேடி வரும்

Viduthalai
2 Min Read

காங்கிரஸ் கணிப்பு

புதுடில்லி, ஜூன் 1 ஜூன் 4ஆம் தேதி உறுதியான, தெளிவான மக்கள் தீர்ப்பை பெறுவோம். அதைத் தொடர்ந்து பா.ஜனதா கூட்டணி கட்சிகள், ‘இந்தியா’ கூட்டணியில் சேர வரிசையில் வரும் என்று காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித் துள்ளது.
தெளிவான மக்கள் தீர்ப்பு
டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை யகத்தில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா, சுப்ரியா சிறீநேட் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது ஜெய்ராம்ரமேஷ் கூறிய தாவது:-
ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படு கின்றன. அப்போது, ‘இந்தியா’ கூட்டணி உறுதியான தெளிவான மக்கள் தீர்ப்பை பெறும். கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி துடைத்து எறியப்பட்ட ராஜஸ்தான், கருநாடகா, மராட்டியம், உத்தரப்பிரதேசம், பீகார், தெலங்கானா, அரி யானா, பஞ்சாப் ஆகிய மாநி லங்களிலும் இந்த தடவை நல்ல வெற்றி கிடைக்கும்.

மோடி தடுமாற்றம்
நான் டில்லியில் உட்கார்ந்து இதை சொல்லவில்லை. அந்த மாநிலங்களுக்கு நான் சென்று நிலவரத்தை பார்த்துள்ளேன். மல்லி கார் ஜூன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரும் சென்று பார்த்துள்ளனர்.
காங்கிரசின் தன்னம்பிக்கைக்கான முக்கிய காரணம், பிரதமர் மோடியின் தடுமாற்றம்தான். வழக்க மாக தன்னம்பிக்கையுடன் பேசும் மோடி. இம்முறை அதிர்ந்துபோய்விட்டார். காங்கிரசின் தேர்தல் அறிக்கை, கார்கே, ராகுல் ஆகியோரின் பேச்சுகள் குறித்து பொய்களை அள்ளிவிட்டார்.
அவரது தடுமாற்றத்தில் இருந்து ‘இந்தியா’ கூட்டணி வெற்றி உறுதியாகி விட்டது.
தேர்தல் விதிமீறல் தொடர் பாக 77 நாள்க ளில் 117 புகார்களை அளித்தோம், பிரதமர் மோடி மீது மட்டும் 14 புகார்கள் அளித்தோம். ஆனால் தேர்தல் ஆணை யம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கூட்டணியில் சேர வரும்
தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், பா.ஜனதா கூட்டணியில் இருந்து சில கட்சிகள், ‘இந்தியா’ கூட்டணியில் சேர வரிசையில் நிற்கும்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மீண்டும் பல்டி அடிப்பார் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். ஜூன் 4-ஆம் தேதி, நிதிஷ்குமார் என்ன செய்வார் என்று எனக்கு தெரியாது.
நிதிஷ்குமார் இல்லாம லேயே நாங்கள் வெற்றி பெறுவோம். அவரது ‘பல்டி’ எங்களுக்குத் தேவையில்லை. அதே சமயத்தில் ‘பல்டி’ அடிக்க விரும்புபவர்களை நாங்கள் தடுக்க முடியாது.
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில், பாலகோட் தாக்குதல் உணர்வுபூர்வ பிரச்சினையாக இருந்தது. ஆனால் இப்போது எந்த அலையும் இல்லை.
அரசமைப்புச் சட்டம், இடஒதுக்கீடு ஆகிய பிரச்சினைகள் எங்களுக்கு பலன் அளித்தன. அத னால்தான். ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் தீர்ப்பு இருக்கும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறோம்.
-இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *