விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் ரூபாய் 181 கோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Viduthalai
3 Min Read

அரசு, தமிழ்நாடு


சென்னை, செப்.5
– வேளாண் துறை சார்பில் ரூ.62.42 கோடி யில் கட்டடங்களைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், வடகிழக்குப் பருவமழை குறைவாக பெய்ததால் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடி மதிப்பில் வறட்சி நிவா ரண நிதியையும் வழங்கினார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேளாண் துறை சார்பில், சென்னை – கிண்டி, வேளாண் தொழில்நுட்ப பசுமை பூங்கா வில் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்துக்காக ரூ.32.64 கோடியில் நிர்வாக கட்டடம், திருப்பூர்- தாராபுரத்தில் ரூ.4 கோடியில் ஒழுங்குமுறை விற்ப னைக்கூடம், திருவண்ணாமலை -_ தெள்ளானந்தலில் ரூ.3.20 கோடியில் சமையல் எண்ணெய் களுக்கான இயந்திரங்களுடன் கூடிய நவீன சிப்பம் கட்டும் அமைப்பு, சந்தை ஊக்குவிப்பு மய்யம் ஆகியவை கட்டப்பட் டுள்ளன. 

மேலும், விழுப்புரம் – மேல் மலையனூர், வல்லம், செஞ்சி, கடலூர் – குமராட்சி, கீரப்பாளை யம், காட்டுமன்னார்கோவில், கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை, அரியலூர் ஆகிய இடங்களில் ரூ.22.58 கோடியில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரி வாக்க மய்யங்கள் என ரூ.62.42 கோடியில் கட்டப்பட்ட கட்ட டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத் தார்.

வேளாண் கருவிகள்

வேளாண் பட்ஜெட்டில், ‘கலை ஞரின் அனைத்து கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில், ஒரு கிரா மத்துக்கு இரண்டு பவர்டில்லர் இயந்திரங்கள் என்ற அடிப்படை யில் வரும் நிதியாண்டில், 2,504 கிராமங்களுக்கு ரூ.43 கோடி மானியத்தில் பவர்டில்லர்கள் வழங்கப்படும்” என்று அறிவிக் கப்பட்டது. 

அதன்படி, முதல்கட்டமாக ரூ.35 கோடி மானியத்தில் 3,907 விவசாயிகளுக்கு பவர்டில்லர் கள் மற்றும் 293 விவசாயிகளுக்கு விசைகளையெடுப்பான் கருவிகள் என மொத்தம் 4200 விவசாயிகளுக்கு இக்கருவிகள் வழங்கப்படுகின்றன. இதைத் தொடங்கி வைக்கும் விதமாக, 2 விவசாயிகளுக்கு பவர்டில்லர் கள் மற்றும் ஒரு விவசாயிக்கு விசை களையெடுப்பான் கருவி வழங்குவதற்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

வறட்சி நிவாரணம்

கடந்த 2022-ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத் தில் குறைவாக மழை பெய்ததால் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, விருது நகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான வறட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக 3,52,797 ஏக்கரில் பயிரிடப்பட்ட வேளாண் பயிர் கள் 33 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்டது. பாதிக்கப் பட்ட மாவட்டங்களில் வரு வாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கணக்கீடு செய்து 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல்பாதிக்கப்பட்ட பரப்பை உறுதி செய்தனர்.

அதன்படி, மாவட்ட ஆட்சி யர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துரையை பரிசீலித்து, 1,87,275 விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடி நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. 

அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 1,34,305 விவசாயிகளுக்கு ரூ.132.71 கோடி, சிவகங்கையில் 25,847 பேருக்கு ரூ.25.77 கோடி, தென் காசியில் 17,096 பேருக்கு ரூ.13.85 கோடி, புதுக்கோட்டையில் 6,746 பேருக்கு ரூ.6.63 கோடி, விருது நகரில் 3,220 பேருக்கு ரூ.2.40 கோடி, தூத்துக்குடியில் 61 பேருக்கு ரூ.4.43 லட்சம், என ரூ.181.40 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது.

மாவட்டங்களுக்கு ஒதுக்கப் பட்ட நிதியை விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்க மாவட்டஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வறட்சி நிவாரணம் வழங்கும் பணியை தொடங்கி வைக்கும் விதமாக 3 விவசாயிகளுக்கு நிவாரண நிதிக்கான ஆணை களை முதலமைச்சர் வழங்கி னார்.

இந்நிகழ்ச்சியில், அமைச் சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல் வம், உதயநிதி ஸ்டாலின், 

டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, வேளாண் துறை சிறப்பு செயலர் இரா.நந்த கோபால் உள்ளிட்டோர் பங் கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *