திருப்பூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு- குடிஅரசு நூற்றாண்டு விழா

Viduthalai
1 Min Read

திருப்பூர், மே 17- திருப்பூர் மாவட்ட கழ கம் சார்பில் சுயமரியாதை இயக்கம் மற்றும் குடிஅரசு நூற்றாண்டு தொடக்க விழா பரப்புரை கூட்டம் அனுப்பர்பாளை யம் பெரியார் காலனி டி.டி.பி.மில் அருகில் நடைபெற்றது.
நிகழ்விற்கு பகுதிக்கழக அமைப்பாளர் சுதன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட காப்பாளர் அவினாசி இராமசாமி, மாவட்ட தலைவர் யாழ். ஆறுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கிருஷ்ணவேணி அனைவரையும் வர வேற்று பேசினார்.

தொடக்கத்தில் புரபசர் திண்டுக்கல் ஈட்டி மு.கணேசன் மந்திரமா? தந்திரமா? என்னும் அறிவியல் விளக்க மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியினை செய்து காட்டினார். அதனைத் தொடர்ந்து நிறைவாக கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா சிறப்புரையாற்றி னார்.
மாமன்ற உறுப்பினர் செல்வராஜ் (சி.பி.அய்), சி.பி.எம். நிர்வாகி ரங்கராஜ், புத்தக விற்பனையாளர் மைனர், தட்டான் குட்டை இரா.சுரேசு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோபிச்செட்டிப்பாளையம் கழக மாவட்டம் சார்பில் அளுக்குளி ஊராட்சி யில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கம் மற்றும் குடிஅரசு நூற்றாண்டு தொடக்க விழா பரப்புரைக் கூட்டத்திற்கு அந்த பகுதியில் புதிதாக இயக்கத்தில் இணைந்த விஜயசங்கர் தலைமை தாங்கினார். இத்தனை ஆண்டு காலத்தில் அளுக்குளி ஊராட்சியில் திராவிடர் கழக பரப்புரை கூட்டம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *