புதிய பாடத்திட்டத்தின் பெயரில் புதுச்சேரியில் தமிழை ஒழிக்க நினைக்கும் ஒன்றிய அரசு

1 Min Read

புதுச்சேரி, மே 16 புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் பிஏ, பிஎஸ்சி, பி.காம் போன்ற பட்டப்படிப்புக்களில் நான்கு பருவங் களிலும் பயிற்றுவிக்கப்பட்ட தமிழ் பாடம், தற்போது இரண்டாவது மற்றும் நான்காவது பருவங்களில் மட்டும் கற்றுக் கொடுக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் அதன் நிறுவனர் சுவாமி நாதன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு மனுவில்“தமிழ் மொழி பயிற்றுவிக்கும் நேரம் வாரத்திற்கு நான்கு மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கருநாடகா போன்ற மாநிலங்களில் 4 பருவங்களுக்கு மொழி பாடம் நடத்தப்படும் நிலையில், புதுச்சேரியில் இரு பருவங்கள் மட்டும் தமிழ் மொழி பாடம் நடத்தப்படுவது மாணவர்களின் அடிப்படை உரிமையை பாதிப்பதாக உள்ளது மேலும்
2023 -2024ஆம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு பழைய நடைமுறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைக்கப் பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி புதுச்சேரி அரசுக்கும், புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *