புதிய பாடத்திட்டத்தின் பெயரில் புதுச்சேரியில் தமிழை ஒழிக்க நினைக்கும் ஒன்றிய அரசு

viduthalai
1 Min Read

புதுச்சேரி, மே 16 புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் பிஏ, பிஎஸ்சி, பி.காம் போன்ற பட்டப்படிப்புக்களில் நான்கு பருவங் களிலும் பயிற்றுவிக்கப்பட்ட தமிழ் பாடம், தற்போது இரண்டாவது மற்றும் நான்காவது பருவங்களில் மட்டும் கற்றுக் கொடுக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் அதன் நிறுவனர் சுவாமி நாதன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு மனுவில்“தமிழ் மொழி பயிற்றுவிக்கும் நேரம் வாரத்திற்கு நான்கு மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கருநாடகா போன்ற மாநிலங்களில் 4 பருவங்களுக்கு மொழி பாடம் நடத்தப்படும் நிலையில், புதுச்சேரியில் இரு பருவங்கள் மட்டும் தமிழ் மொழி பாடம் நடத்தப்படுவது மாணவர்களின் அடிப்படை உரிமையை பாதிப்பதாக உள்ளது மேலும்
2023 -2024ஆம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு பழைய நடைமுறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைக்கப் பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி புதுச்சேரி அரசுக்கும், புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *