இதுதான் பி.ஜே.பி. தேர்தல் வாக்குச் சாவடிக்குப் பணம் வாட்ஸப்பில் வெடித்த மோதல்

1 Min Read

சென்னை,மே14- சென்னை, நங்கநல்லூரில் பா.ஜ.க.வினர் மூன்று பிரிவுகளாக, தனித்தனியே செயல்பட்டு வருவ தாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், வாக்குச்சாவடி முகவர் செலவிற்கு கட்சி மேலிடம் கொடுத்த பணத்தை, நிர்வாகிகளுக்கு மண்டல பொறுப்பாளர்கள் சரிவர பிரித்துக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இது தொடர்பாக, ‘வாட்ஸப், பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மோதல் வெடித்தது.
இந்நிலையில், சென்னை, கிழக்கு மாவட்ட நங்க நல்லூர் மண்டல பா.ஜ.க., – அய்.டி., பிரிவு தலைவர் பிரசன்னாவின் தந்தை விட்டல் மரணமடைந்தார். அப்போது, தேர்தல் வாக்குச்சாவடி பணம் விவகாரம் தொடர்பாக, நங்கநல்லூர் பா.ஜ.க., மண்டல தலைவர் ஜவகர் ஆம்ஸ்ட்ராங் (வயது 46), மண்டல செயலர் ஜெயக்குமார், (வயது 44) ஆகியோர், ராமச்சந்திரனிடம் வீண் தகராறில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, ராமச்சந்திரன் அளித்த புகாரின்படி, பழவந்தாங்கல் காவல்துறையினர் விசாரித்து, இரு வரையும் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் (12.5.2024) நள்ளிரவு இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *