ஒடிசாவில் ஆட்சி அமைப்போம் என பாஜக பகல் கனவு காண்கிறது

1 Min Read

புவனேஸ்வர், மே 7 ஒடிசா வில் ஆட்சி அமைப்போம் என பாஜக பகல் கனவு காண்பதாக அம்மாநில முதல மைச்சர் நவீன் பட்நாயக் தெரி வித்துள்ளார். ஒடிசா மாநில சட்டசபைத் தேர்தலும் நாடா ளுமன்ற தேர்தலும் இரண்டு கட்டங்களாக வரும் மே 13 மற்றும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இன்று ஒடிசாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்தார்
அப்போது பிரதமர் மோடி, “வரும் ஜூன் 4ஆம் தேதி பிஜு ஜனதா தளம் அரசு காலாவதியாக போகிறது. நாங்கள் அன்று பாஜக சார்பில் முதலமைச்சர் யார் என்று அறிவிப்போம். பாஜக ஜூன் 10 ஆம் தேதி முதலமைச்சருடன் பதவி ஏற்க உள்ளது. பாஜக ஒடிசாவில் முதன்முறையாக ஆட்சி அமைக்கப் போகிறது.” என்று பேசினார். இவ்வாறு ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என பிரதமர் மோடி பேசியதை விமர்சித்த அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஒடிசாவில் ஆட்சி அமைப்போம் என பா.ஜனதா பகல் கனவு காண்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *