மோடி உறுதி அளித்த விவசாயிகளுக்கான இரண்டு பங்கு வருவாய் கிடைத்ததா? அகிலேஷ் கேள்வி

viduthalai
1 Min Read

படான், மே 6 மூன்றாம் கட்ட தேர்தலின் போது உத்தரப் பிரதேசத்தி;ல் பாஜகவை மக்கள் துடைத்து வீசுவார்கள் என அகிலேஷ் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள படானில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மூன்றாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அகிலேஷ் தனது பிரச்சாரத்தின் போது,

“வரும் மே 7-ஆம் தேதி நடை பெறும் 3ஆ-வது கட்ட தேர்தலில் பாஜகவை மக்கள் 7 மைல்களுக்கு அப்பால் தூக்கி வீசுவர். அவர்கள் இந்த தேர்தலில் முழுமையாக துடைத்து எறியப்படுவர். எற்கெ னவே முதல் இரண்டு கட்டங்களில் மக்கள் பாஜகவை கவிழ்த்து. மூன் றாவது கட்டத்தில் இவர்களை துடைத்தெறியப் போகிறார்கள்.
அவர்கள் விவசாயிகள் வரு மானம் இரட்டிப்பாக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். இன்று விவசாயிகள் தங்கள் வரு வாயை கணக்கிட்டால், கவலையே மிஞ்சும். ஏனென்றால் விலைவாசி உயர்வால் உற்பத்திக்கு தகுந்த வருவாயை ஈட்ட முடியவில்லை. விவசாய உற்பத்திக்கான செலவை அரசும் வழங்கவில்லை’

பா.ஜ.க. அனைத்துப் பிரிவினருக்கும் போலி வாக்குறுதி அளித்துள்ளது. பாஜகவினர் கடந்த 10 ஆண்டுகளாக வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய் யாகவே மாறி உள்ளது. எனவே ஆத்திரமடைந்த மக்கள் பாஜகவை தூக்கி வீசுவது உறுதி” என்று தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *