வேட்பாளரை விரட்டிய மக்கள் கருநாடகாவில் தொடரும் பா.ஜ.க. எதிர்ப்பலை

Viduthalai
1 Min Read

தார்வாட், கருநாடகா ஏப் 30 ஹூப்பள்ளி, ஷிகாவி சட்டமன்ற தொகுதியில் ‘ரோடு ஷோ’ நடத்திய பா.ஜ., வேட்பாளர் பிரஹலாத் ஜோஷியின் வாகனத்தை இளை ஞர்கள் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தார்வாட் பா.ஜ., வேட்பாளராக ஒன்றிய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி போட்டியிடுகிறார். இவ ருக்கு ஆரம்பம் முதலே திங்க ளேஸ்வர சுவாமிகள் எதிர்ப்பு தெரிவித்து சுயேச்சையாக போட் டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். மூத்த மடாதிபதிகள், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதால், வேட்பு மனுவை திரும்பப் பெற்றார். ஷிகாவி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வனஹள்ளி கிராமத்தில் ரோடு ஷோ நடத்தி பிரஹலாத் ஜோஷி பிரச்சாரம் செய்தார். அப்போது இக்கிரா மத்தை சேர்ந்த இளைஞர்கள், வாகனத்தை நிறுத்தி, ‘பல ஆண்டு களாக தார்வாட் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினராக உள்ளீர்கள். எங்கள் கிராமத்துக்கு என்ன வளர்ச்சி பணிகள் செய்துள்ளீர்கள்’ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பிரஹலாத் ஜோஷி, ‘ஜல் ஜீவன் திட்டத்துக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள் ளேன்’ என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள், ‘உங் களின் மானியம் எங்கிருந்து வந் தது. நீங்கள் யாரை வளர்த்தீர்கள்’ என கூறி, எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர். ஆனாலும், பிரஹ லாத் ஜோஷி தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார். பிரச்சாரத்துக்கு இடையூறாக இருந்தவர்களை, பா.ஜ.,வினர் அடித்து விரட்டத் துவங்கினர் இக்கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அங்கு அடிதடி ஏற்படவேபா.ஜ., வேட் பாளர் பிரஹலாத் ஜோஷியின் பேச்சை நிறுத்திவிட்டு அங்கிருந்து புறபப்ட்டுச்சென்றார். அவர் சென்ற பிறகு அவரோடு வந்த பாஜகவினர் மக்களைப் பார்த்து எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் அப் பகுதியே பரபரப்பாக இருந்தது

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *