பீகார் குழந்தைகள் உ.பி.க்கு கடத்தலா? அயோத்தியில் மீட்கப்பட்ட 95 குழந்தைகள்

viduthalai
2 Min Read

லக்னோ,ஏப்.28- பீகாரில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 95 குழந்தைகளை உத்தரப்பிரதேச மாநில குழந்தைகள் ஆணையம் நேற்று முன்தினம் (26.4.2024) மீட்டுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அயோத்தி குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் சர்வேஷ் அவஸ்தி கூறுகையில்,

உ.பி. குழந்தைகள் ஆணைய உறுப்பினர் சுசித்ரா சதுர்வேதி 26.4.2024 அன்று காலை பீகாரில் இருந்து சஹரன்பூருக்கு சட்டவிரோதமாக குழந்தைகள் கடத்தப் பட்டு வருவதாகவும், கோரக்பூரில் இருப்பதாகவும், அயோத்தி வழியாகச் செல்வதாக தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து கோரக்பூரில் அயோத்தி செல்லும் வழியில் சோதனையில் ஈடுப்பட்டிருந்த குழந்தைகள் ஆணையக் குழுவினர் 26.4.2024 அன்று காலை 9 மணியளவில் குழந்தைகளை ஏற்றி வந்த பேருந்தை நிறுத்தி குழந்தைகளை மீட்டனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது மற்றும் மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட குழந்தைகள் 4-12 வயதுக்கு இடைப்பட்ட வர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பது கூட தெரியவில்லை அவர் கூறினார்.

“குழந்தைகளை அழைத்து வந்தவர்களிடம் பெற்றோ ரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் எதுவும் இல்லை. பெற்றோர்களை தொடர்பு கொண்டு குழந்தைகள் ஒப்படைக்கப்படுவார்கள் என்று சர்வேஷ் அவஸ்தி கூறினார்.
பெற்றோரின் ஒப்புதலின்றி குழந்தைகள் எதற்காக பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது தொடர் பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் அவர் தெரிவித்தார்.

2024 மக்களவைத் தேர்தலில்
ரூ.1.35 லட்சம் கோடி செலவு!
ஆய்வில் கணிப்பு

கொல்கத்தா, ஏப்.28- உலகிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பு மக்களவைத் தேர்தலில் ரூ.1.35 லட்சம் கோடி வரை செலவிடப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 35 ஆண்டாக தேர்தல் செலவினங்களை கண் காணித்து வரும் தனியார் லாபநோக்கமற்ற நிறுவனமான சென்டர் பார் ஸ்டடிஸ் (சிஎம்எஸ்) நிறுவனம், தற்போது நடந்து வரும் மக்களவைத் தேர்தல் செலவு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக ரூ.1.35 லட்சம் கோடி வரை செலவிடப்படும் என எதிர்பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது.

இது, தேர்தல் தேதி அறிவிப்பதற்காக சுமார் 4 மாதத் திற்கு முன்பிருந்தே செய்யப்பட்ட செலவுகளும் உள்ளடக் கியது. மேலும், வேட்பாளர்கள் பிரசார செலவு, அரசியல் பேரணிகள், போக்குவரத்து, பாதுகாப்பு படையினரை பணியமர்த்துதல், கட்சிகளுக்கு தரப்படும் நன்கொடை, தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் விழிப்புணர்வு என ஒட்டுமொத்த செலவுகளும் கணக்கிடப்பட்டுள்ளது.

இது குறித்து சி.எம்.எஸ். தலைவர் பாஸ்கரராவ் கூறுகையில், ‘‘முதலில் ரூ.1.2 லட்சம் கோடி செலவாகும் என மதிப்பிட்டிருந்தோம். தற்போது தேர்தல் பத்திர விவரங்கள் வெளியாகியிருப்பதைத் தொடர்ந்து மதிப் பீட்டை திருத்தி ரூ.1.35 லட்சம் கோடியாக நிர்ணயித் துள்ளோம்.
இதில் தேர்தல்ஆணைய செலவுகள் 10 முதல் 15 சதவீதம் இருக்கும். கடந்த 2019 மக்களவை தேர்தலில் மொத்த செலவு ரூ.60 ஆயிரம் கோடி. இதை விட 2 மடங்கு அதிகமாக இம்முறை செலவு செய்யப்படும்’’ என்றார்.

மக்களவை தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் எண்ணிக்கை 96.6 கோடி. மொத்த செலவும் சேர்த்து, தேர்தலுக்காக ஒரு நபருக்கு ரூ.1,400 செலவிடப்படுகிறது. கடந்த 2020இல் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரூ.1.2 லட்சம் கோடி செலவிடப்பட்டது. இதையும் மிஞ்சி உலகிலேயே அதிக செலவுமிக்க தேர்தலாக 2024 மக்களவை தேர்தல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *