புதுடில்லி, ஏப். 28- இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு உரிமையில்லை என்று டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்திய தலைநகர் டில்லியில் சமீபத்தில் ஒரு வழக்கு விசா ரணைக்கு வந்தது. இந்த வழக்கில் உயிரிழந்த ஒரு நபருக்கு மனைவி மற்றும் 6 பிள்ளைகள் மற்றும் ஒரு பேத்தி. இவர்கள் சொத்தை பிரித்து கொள்வது குறித்த வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா எம் சிங், “உயிரிழந்த கணவன் சொத்தை ஹிந்து மனைவி வாழ்நாள் முழுவதும் அனுபவித்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் அந்த சொத்தை விற்கவோ அல்லது கைமாற்றவோ முடியாது.கணவன் உயிரிழந்த பிறகு, வருமானம் இல்லாமல் இருக்கும் பெண்கள் கணவனின் சொத்தை அனுபவித்துக் கொள்ளலாம்.
அதற்காக முழுஉரிமையும் பெண்களுக்கே மனைவிமார்க ளுக்கே வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த பெண்களுக்கு வருமா னம் இல்லாத நிலையில், அவர்கள் பிள்ளைகளை நம்பி இருக்கக் கூடாது என்பதால் இந்த உரிமை வழங்கப்படுகிறது என்பதை நினை வில் கொள்ள வேண்டும். இந்த பெண்கள் அந்த சொத்துகளை தங்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க முடியும். ஆனால் விற்க முடியாது,” எனத் தீர்ப்பு வழங்கியுள்ளார்.