கணவனின் சொத்தை மனைவி அனுபவிக்கலாம், விற்க அனுமதியில்லையாம்: டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

1 Min Read

புதுடில்லி, ஏப். 28- இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு உரிமையில்லை என்று டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்திய தலைநகர் டில்லியில் சமீபத்தில் ஒரு வழக்கு விசா ரணைக்கு வந்தது. இந்த வழக்கில் உயிரிழந்த ஒரு நபருக்கு மனைவி மற்றும் 6 பிள்ளைகள் மற்றும் ஒரு பேத்தி. இவர்கள் சொத்தை பிரித்து கொள்வது குறித்த வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா எம் சிங், “உயிரிழந்த கணவன் சொத்தை ஹிந்து மனைவி வாழ்நாள் முழுவதும் அனுபவித்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் அந்த சொத்தை விற்கவோ அல்லது கைமாற்றவோ முடியாது.கணவன் உயிரிழந்த பிறகு, வருமானம் இல்லாமல் இருக்கும் பெண்கள் கணவனின் சொத்தை அனுபவித்துக் கொள்ளலாம்.

அதற்காக முழுஉரிமையும் பெண்களுக்கே மனைவிமார்க ளுக்கே வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த பெண்களுக்கு வருமா னம் இல்லாத நிலையில், அவர்கள் பிள்ளைகளை நம்பி இருக்கக் கூடாது என்பதால் இந்த உரிமை வழங்கப்படுகிறது என்பதை நினை வில் கொள்ள வேண்டும். இந்த பெண்கள் அந்த சொத்துகளை தங்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க முடியும். ஆனால் விற்க முடியாது,” எனத் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *