இன்றுடன் 2ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஏப். 24- 2ஆம் கட்ட தேர்த லுக்கான பிரச்சாரம் நாளை மறுநாள் (26.4.2024) நடைபெற உள்ள நிலையில் பரப்புரை இன்றுடன் (24.4.2024) நிறைவு பெறுகிறது.
கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. நாளை மறுநாள் அதா வது ஏப்.26ஆம் தேதி அன்று கேரளா, கருநாடகா, உத்தரப் பிரதேசம் உள் ளிட்ட மாநிலங்களில் உள்ள 89 தொகு திகளில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக் கல் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 6 ஆம் தேதி வேட்புமனு பரிசீ லனை நடைபெற்றது. இன்றுடன் இரண் டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைகிறது.
இதனால் தேர்தல் களம் சூடு பிடித்து அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று காங் கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி அமராவதி, சோலாபூரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பரப் புரை மேற்கொள்கிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *