புதுடில்லி,ஏப்.24– ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அய்ஏஎஸ், அய்பிஎஸ் தேர்வுகளின் வினாத்தாள்களை செயற்கை நுண்ண றிவு தொழில்நுட்பத்தை (ஏஅய்) பயன் படுத்தி மாநில மொழிகளில் மொழி யாக்கம் செய்து வழங்குவது தொடர் பாக பரிசீலிக்கலாம் என ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
அய்ஏஎஸ், அய்பிஎஸ் போன்ற குடிமைப் பணித் தேர்வுகள் மாநில மொழிகளில் எழுத அனுமதிக்கப்பட் டுள்ளது.
ஆனால், வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வழங்கப் படுவதால், அரசியல் சாசனத்தின் 8ஆவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்தத் தேர்வு களுக்கான வினாத் தாள்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந் தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வில் நேற்று (23.4.2024) விசாரணைக்கு வந்தபோது, இந்தக் கோரிக்கைக்கு பதிலளிக்க ஒன் றிய அரசு தரப்பில் அவகாசம் கோரப் பட்டது.
இதை ஏற்று, வழக்கின் விசார ணையை ஜூன் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், ‘செயற்கை நுண் ணறிவு தொழில்நுட்பம் மூலம் தற் போது எளிதாக மொழிபெயர்ப்பு செய்யலாம். அவ்வாறு மொழியாக்கம் செய்து மாநில மொழிகளில் வினாத் தாள்களை தயாரிக்கலாம்.
இந்த மொழி பெயர்ப்பு நூறு சதவீதம் சரியாக இல்லாவிட்டாலும், 70 சதவீதம் வரை சரியாக இருக்கிறது.
அவற்றை மனிதர்களைப் பயன் படுத்தி சரி செய்யலாம். இது சம்பந்த மாக நேர்மறையாக ஒன் றிய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என கருத்து தெரிவித்தனர்.