புதுடில்லி, ஏப். 21- காங்கிரஸ் பொதுச் செயலாளர்ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில், “மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற வினாத்தாள் கசிவு மற்றும் ஆள்சேர்ப்பு ஊழல்களில் பிரதமர் மோடி யாரைப் பாதுகாக்கிறார்? பா.ஜ.க. வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில், ஆதிவாசிகளை ஏன் கைவிட்டது? மத்தியப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்ற விகிதங்கள் அதிகளவில் உள்ளது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதைத் தொடர்ந்து தனது எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ள அவர்,
பழங்குடி மக்களுக்கு வனத்தின் மீதான உரிமையை மீட்டெடுக்கும் வகையில் கடந்த 2006-ஆம் ஆண்டு காங்கிரஸால் வன உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பா.ஜ.க. அதை அமல்படுத்துவதை தடுத்துகோடிக் கணக்கான ஆதிவாசிகளின் நன்மைகளைப் பறித்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியில் இருந்தபா.ஜ.க.அரசு ஏன் ஆதிவாசிகளின் உரிமைகளை வழங்கத் தவறிவிட்டன?
2021-ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்ற விகிதம் 63.6 ஆக இருந்தது, இது தேசிய சராசரியான 25.3 ஆக இருந்தது. அதே போன்று2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான அதிககுற்ற விகிதங்களை இந்த மாநிலம் பதிவு செய்துள்ளது. தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது வெட்கக்கேடானது.
பா.ஜ.க.இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மத்திய பிரதேசத்தில் ஆட்சியில் உள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள்தங்கள் பாதுகாப்பு குறித்து ஏன் அதிகமாக அஞ்ச வேண்டும்? தாழ்த்தப்பட்டவர்கள் அனுப வித்த எண்ணற்ற கொடுமைகளுக்காக பிரதமர் மோடி வெட்கப்படவில்லையா? இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் கலைக்க வேண்டும்” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.