புதுக்கோட்டையில் நகர கழகத்தின் சார்பில் கலந்துறவாடல் கூட்டம்

Viduthalai
1 Min Read

புதுக்கோட்டை, ஏப். 19- புதுக் கோட்டை மாவட்ட கழக அலுவலகத்தில் நகர திராவிடர் கழகத்தின் கலந்துறவாடல் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகித்தார். கழகக் காப்பா ளர் ஆ.சுப்பையா, மாவட் டச் செயலாளர் ப.வீரப் பன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். நகரத் தலைவர் ரெ.மு.தருமராசு அனைவரையும் வரவேற் றார்.
இந்நிகழ்வில் பொதுக் குழு உறுப்பினர் செ.இரா சேந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் சு.கண் ணன், ஒன்றியச் செயலா ளர் பு.ஆம்ஸ்ட்ராங், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் தாமரைச் செல்வன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண் டனர்.
இந்நிகழ்வில் நகர கழ கத்தின் சார்பில் மாதம் தோறும் கலந்துறவாடல் கூட்டம் நடத்துவது எனவும், மாதந்தோறும் தெருமுனைக் கூட்டங் கள் நடத்துவது எனவும், இயக்கத்தில் புதிய உறுப் பினர்களை சேர்ப்பது எனவும், கழகத்தின் ஏடுக ளான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகிய ஏடுகளை இன் றைய இளைஞர்களிடம் கொண்டு சென்று சேர்ப் பது எனவும், புதுக் கோட்டை மாநகராட் சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவியருக்கு பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடத்தி பரி சுகள் வழங்கி பெரியாரின் கருத்துகளைக் கொண்டு சென்று சேர்ப்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தாமரைச்செல்வன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *