Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: விவசாயிகளின் 5 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய நிதி இல்லை என்ற மோடி அரசு முதலாளிகளுக்கு 30 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தது எப்படி?
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
திராவிடர் கழகம்

விவசாயிகளின் 5 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய நிதி இல்லை என்ற மோடி அரசு முதலாளிகளுக்கு 30 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தது எப்படி?

Last updated: April 17, 2024 2:51 pm
Published: April 17, 2024
திராவிடர் கழகம்
SHARE

மயிலாடுதுறை, நாகப்பட்டினம் கூட்டங்களில் ஆசிரியரின் பொருள் பொதிந்த கேள்வி!

மயிலாடுதுறை, நாகை. ஏப். 17- தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இரண்டு பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தமிழ் நாடு தழுவிய அளவில் சூறாவளியாய் சுற்றிச் சுழன்று வரும் பயணத்தின் 14 ஆம் நாளில் 15.04.2024 அன்று மாலையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் மத்திய சிறைச்சாலை அருகில் சின்னக் கடைத் தெருவில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டி யிடும் வழக்குரைஞர் ஆர். சுதா அவர்களை ஆதரித்தும், அடுத்த கூட்டமான நாகை அவுரித்திடலில் இந்தியா கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளு மன்ற வேட்பாளர் வை.செல்வராஜ் அவர்களை ஆதரித் தும் ஆசிரியர் உரையாற்றினார்.

மயிலாடுதுறையில் தமிழர் தலைவர்!
முதல் கூட்ட நிகழ்வில் மாவட்டத் தலைவர் குண சேகரன் தலைமையில், மாவட்டச் செயலாளர் தளபதி ராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார். இறுதியில் ஆசிரியர் பேசினார்.
ஆசிரியர் பேசுகையில், “அசைக்கவே முடியாது என்று சொல்லப்பட்ட பிரதமர் மோடி இன்று தமிழ்நாட் டால் அசைக்கப்பட்டிருக்கிறார்” என்று அதிரடியாக தொடங்கினார். ”மயிலாடுதுறைக்கும் திராவிடர் இயக்கத் திற்கும் 100 ஆண்டுகள் வரலாற்றுப் பின்னணி உண்டு” என்று நேர நெருக்கடி இருந்தாலும், மயிலாடுதுறையில் இருந்த அடிநாள் தொண்டர் வழக்குரைஞர் லட்சுமிகாந்தன் உள்ளிட்டோரை நினைவு படுத்திவிட்டு, ”யாரைத் தேர்ந்தெடுத்தால் ஜனநாயகம் காப்பாற்றப்படும்? யாரைத் தேர்ந்தெடுக்கா விட்டால் சர்வாதிகாரம் கோலோச்சும்?” என்று கேள்விகள் கேட்டு, “மறுபடியும் மோடி வந்துவிட்டால் நாம் இதுபோல் கூட்டம் போட்டுக் கூட பேசமுடியாது” என்று சொல்லி, இந்த தேர்தல் எவ்வளவு முக்கியம் என்பதை தெளிவுபடுத்தினார்.

அது போதாது என்றெண்ணி, “வேட்பாளர்கள், கட்சிகள் ஆகியவைகளுக்கிடையே நடைபெறுகின்ற தேர்தல் அல்ல இந்தத் தேர்தல்! இரண்டு தத்துவங்களுக்கிடையே நடைபெறுகின்ற தேர்தல்!” என்று கூடுதலாக இதைக் குறிப்பிட்டார். பின்னர், அந்த தத்துவம் என்ன? அதையும் ராகுல்காந்தி குறிப்பிட்டது என்ன என்பது பற்றி சொல்லிவிட்டு, இந்தியா என்பது என்ன? என்று கேள்வி கேட்டு, “India that is bharat shall be a union of states” என்று பாபாசாகேப் அம்பேத்கர் அமைத்துக் கொடுத்த அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தைச் சொல்லி, மோடி அதைப் பற்றிக் கவலைப்படாமல், அவர் ஏதோ மன்னர் போலவும், மாநில முதலமைச்சர்கள் சிற்றரசர்கள் போல கப்பம் கட்ட வேண்டும் என்பது போலவும் நடைமுறைகள் இருப்பதை நினைவூட்டினார்.

Also read

திராவிடர் கழகம்
சுயமரியாதை இயக்க  நூற்றாண்டு
ச. சியாமளாதேவி – பா. தமிழ்ச்செல்வன் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

கலைவாணரின் இன்றைய சந்திரஹரி தான் மோடி!
தொடர்ந்து பேசிய ஆசிரியர், “மோடி சிறந்த நடிகர். உலகளவில் நடிப்பதற்காக உச்சபட்ச விருது கொடுப்ப தாக இருந்தால் அதை நமது பிரதமர் மோடிக்குக் கொடுக்கலாம்” என்றார். மேலும் அவர், மோடி தொடர்ந்து பொய் பேசுவதை சுட்டிக்காட்ட எண்ணி, 1941 இல் வெளியான கலைவாணரின் சந்திரஹரி திரைப் படத்தைப் பற்றி பேசினார். ’ஹரிச்சந்திரன்’ புராணப்படி உண்மையை மட்டுமே பேசுகின்றவன். நந்தனார் என்பது கிந்தனார் ஆனது போல், ஹரிச்சந்திரன் சந்திரஹரி ஆனார். அதாவது சந்திரஹரி பொய்யை மட்டுமே பேசுவதாக கதை அமைக்கப்பட்டிருக்கும். பொய்யை மட்டுமே பேசும் சந்திரஹரியை ஒரே ஒரு உண்மையை மட்டுமாவது பேசவைக்க வேண்டும் என்று போராடி இறுதியில் தோல்வியை ஒத்துக் கொள்வது தான் திரைப்படக்கதை. ”அந்த சந்திரஹரி தான் இன்றைய பிரதமர் மோடி” என்று இந்தத் தலை முறையினர் அறிந்திராத ஒரு தகவலைக் கூறி, அதை மோடியுடன் பொருத்திக்காட்டி, மோடி எத்தகைய பொய்யர் என்பதை மக்களின் புத்தியில் பதிய வைத்தார். மேலும் ஒன்றிய அரசை குற்றம் சாட்டிப் பேசும் போது, “விவசாயிகள் கடன் 5 லட்சம் கோடிதான். அதைத் தள்ளுபடி செய்ய கோரிக்கை மேல் கோரிக்கை வந்து கொண்டே உள்ளது. ஆனால் மோடி அரசு நிதி இல்லை என்று கைவிரித்துவிட்டது. ஆனால், பெரு முதலாளி களுக்கு கோரிக்கை வைக்கப்படாமலேயே 30 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்ற அதிர்ச்சிகரமான தகவலை மக்கள் முன் வைத்தார். மேலும் அவர், ”காங்கிரஸ், தி.மு.க. தேர்தல் அறிக்கை களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு இருக்கிறது! பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையான மோடி கீ.. கேரண்ட்டீ யில் உண்டா?” என்று கேட்டு, ”நஹி!” என்று ஹிந்தியில் சொல்லி, கையை விரித்து நடித்தும் காட்டினார். இதை எதிர்பார்த்திருக்காத மக்கள் வெடித்துச் சிரித்துவிட்டனர்.

பா.ஜ.க. வின் 400ம் 420ம்!
தொடக்கத்தில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. ஆசிரியர் பேசப் பேச கூட்டம் அதிகரித்து கூடுதல் நாற் காலிகள் போடப்பட்டன. இதையும், “இப்படித்தான் இந் தியா கூட்டணி தொடக்கத்தில் ஆளில்லாமல் இருந்தது. நாளாக நாளாக வெற்றி பெறக்கூடிய அளவுக்கு வந்துள்ளது” என்று ஒப்பிட்டுப் பேசியதும், மக்கள் அட… இப்படியும் பேசுவாரா? என்று வாய்விட்டுச் சிரித்து விட்டனர். ஆசிரியருக்கு மருந்து மக்கள் என்பது போய், ஆசிரியர்தான் மக்களுக்கு மருந்து என்பது போல் மாறிவிட்டது சூழல். மேலும் அவர், எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்பதைச் சொல்ல வந்தவர், ”முதலில் 400 சீட் என்று பா.ஜ.க.வினர் சொல்வந்தனர். 400 சீட்கள் என்று இப்போது யாராவது சொன்னால், அவர்கள் 420 என்று பொருள்” என்று பூடகமாகச் சொன்னார். போதாதற்கு, ”இங்கே வழக்குரைஞர்கள் வேறு நிறைய இருக்கின்றனர்” என்று நினைவூட்ட உடனே சிரித்துவிட்டவர்கள் போக, மற்றவர்கள் தாமதமாக புரிந்து கொண்டு குலுங்கக் குலுங்க சிரித்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகவே மக்கள் வாய்விட்டுச் சிரிக்கும் அளவுக்கு பேசிவிட்டு, இறுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் வழக்குரைஞர் ஆர்.சுதா அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரி யான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார். இறுதியில் மாவட்டத் துணைச் செயலாளர் நாகரெத்தினம் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

மக்கள் கடலான நாகை அவுரித்திடல்!
நாகப்பட்டினம் அவுரித்திடல் மக்கள் கடல் போல் மாறியிருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரள் முன்னிலையில் இரவு 10 மணிக்கு, அரை மணி நேரம் இருக்கும் போது மயிலாடுதுறையிலிருந்து பயணப்பட்ட ஆசிரியர் அங்கு வந்து இறங்கினார். பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் பேசிக்கொண்டிருந்தார். ஆசிரியர் வந்த தும் உரையை நிறைவு செய்து கொண்டார். நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.எ. நெப்போலியன் தலைமையேற்க, மாவட்டச் செயலாளர் ஜெ.புபேஷ் குப்தா அனைவரையும் வரவேற்று பேசியிருந்தார். இந் தியா கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பாளர்கள் அனை வரின் சார்பில் தி.மு.க. நாகை மாவட்டச் செயலாளர் என்.கவுதமன் ரத்தினச் சுருக்கமாக பேசி, ஆசிரியருக்கு உடனடியாக வழிவிட்டார்.

எனக்கு மருந்து மக்கள் தான்!
ஆசிரியர் மிகுந்த உற்சாகத்துடன், “எனக்கு வயதாகி விட்டது; உடல் நலிவுற்றிருக்கிறது; தொண்டை சரியில்லை என்றெல்லாம் சொன்னார்கள். அது உண்மை தான், அதற்கெல்லாம் இந்த மக்கள்தான் மருந்து” என்று மக்களை நோக்கி கைநீட்டினார். ஆசிரியர் மீதான மக்களின் பெரும் அன்பு, அவுரித்திடலையே ஆரவாரங் களாலும், கைதட்டல்களாலும் நிறைத்தது. ஆசிரியர் இன்னும் உற்சாகத்துடன், “2014 இல் மோடியை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. 2019 இலும் மோடியை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. 2024 இல் மோடியை மக்கள் புரிந்து கொண்டுவிட்டனர்” என்று சொல்லிவிட்டு, ”மீண்டும் மோடியா? மீண்டு வருவாரா மோடி” என்பது போன்ற சின்னச் சின்ன துணுக்குகள் போல் பேசினார். அதுவே மக்களுக்குப் புரிந்து, சிரிப்பையும், கைதட்டல் களையும் எதிர்வினையாகத் தந்தது.தொடர்ந்து பேசிய அவர், “இந்தப் பகுதியில் மீனவர்கள் அதிகம். மீனவர் களுக்கு மோடி கொடுத்த கேரண்ட் டீ… என்னாயிற்று?” என்றார். அவரது உச்சரிப்பும், உடல்மொழியுமே மக்களை சிரிப்பிலாழ்த்தியது. தொடர்ந்து, “கச்சத் தீவு பற்றி மோடி இன்றைக்கு ஏன் பேசிக்கொண்டிருக்கிறார்? தேர்தல் பத்திரங்களில் நடைபெற்ற ஊழல்களை மறைப் பதற்கு” என்று மோடியின் திசை திருப்பல்களை அம் பலப்படுத்தினார்.

இடியாப்பச் சிக்கலில் பா.ஜ.க.
மேலும், “இங்கிருக்கும் இசுலாமியரும், கிறித்துவரும் 10 தலைமுறை, 20 தலைமுறைகளுக்கு முன்பு யார்? எங்கள் உடன்பிறப்புகள் தானே? அவனை எட்டி நில் என்றாய்; கட்டிப்பிடித்தவன் கிட்டப் போயிட்டான், அவ்வளவுதானே?” என்று சுமார் 300 ஆண்டுகால சமூக வரலாற்றை ஒற்றை வாக்கியத்தில் அடக்கிவிட்டார், அதுவும் எதுகை மோனையுடன். தொடர்ந்து பேசிய அவர், “இப்படி வெறுப்பு அரசியலையே உத்தியாகக் கொண்டு செயல்பட்டு தான் இப்போது குஜராத்திலேயே பா.ஜ.க. இடியாப்பச் சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறது” என்று பலத்த கைதட்டல் களுக்கிடையே சொல்லிவிட்டு, “நாங்கள் பொறுப்பு அரசியலைச் செய்பவர்கள்” என்று அந்த வாக்கியத்தை பஞ்ச் வைத்து முடித்தார். கைதட்டல் களும் ஈடுகொடுத்து எழுந்து அடங்கியது. ஆசிரியர் அடங்காத ஆவலுடன் பேசிக்கொண்டே இருந்தார். அருகில் அமர்ந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் கடிகாரத்தைக் காட்டிக் கொண்டே இருந்தார். ஆசிரியர் அதை கவனித்து விட்டு, “அனை வரும் கதிர் அரிவாள் சின்னத்தில் வை.செல்வராஜ் அவர்களுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். நேரக்கட்டுப் பாடு காரணமாக எனது உரையை நிறைவு செய்கிறேன்” என்று கேட்டு சட்டென்று முடித்துக்கொண்டார்.

முதல் கூட்டத்தில் முன்னிலை ஏற்றவர்கள்!
தி.மு.க. மாவட்டச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், சி.பி.எம். மாவட்டச் செயலாளர் சீனுவாசன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், தி.மு.க. செயல் திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், நகர் மன்றத் தலைவர் செல்வராசு, சி.பி.அய். மாவட்டச் செயலாளர் சீனிவாசன், சி.பி.அய்.(எம்) எ.சீனிவாசன் ஆகியோரும், திராவிடர் கழகம் சார்பில் கும்பகோணம் கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் நிம்மதி, மயிலா டுதுறை மாவட்ட அமைப்பாளர் ஞான வள்ளுவன், கும்பகோணம் மாவட்டச் செயலாளர் துரைராசு, காப்பாளர்கள் தாராசுரம் இளங்கோவன், முருகையன், நகரத் தலைவர் இளங்கோவன், நகரச் செயலாளர் பூ.சி.காமராஜ், மாவட்ட இளைஞரணித் தலைவர் அருள்தாஸ், பொதுக்குழு உறுப்பினர் திருநாகேஸ்வரம் விஜயகுமார், குடந்தை மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்மணி, திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் எம்.என்.கணேசன், குடந்தை மாவட்ட இளைஞரணித் தலைவர் சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இரண்டாம் கூட்டத்தில் முன்னிலை ஏற்றவர்கள்!
தி.மு.க. நாகை மாவட்டச் செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவருமான என்.கவுதமன், தி.மு.க. திருவாரூர் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கே.கலைவாணன், சி.பி.அய். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.செல்வராஜ், காங் கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் அமிர்தராஜா, ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் இராமஞ்சரி வே.சிறீதரன், த.வ.க. மாவட்டச் செயலாளர் அஸ்கர் அலி, மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர் அனஸ், சி.பி.அய்.(எம்) மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, ச.ம.கழக மாவட்டத் தலைவர் ஆரோக்கியதாஸ், சி.பி.அய். மாவட்டச் செயலாளர் சிவகுரு பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழகம் சார்பில், கழகக் காப்பாளர் முருகையன், தலைமைக்கழக அமைப்பாளர் கிருஷ்ண மூர்த்தி, திருவாரூர் மாவட்டத் தலைவர் மோகன், விவசாய தொழிலாளரணி மாநிலச் செயலாளர் கோவிந்த ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதி யில் நாகை நகரத் தலைவர் செந்தில்குமார் நன்றியுரை சொல்நிகழ்ச்சியை நிறைவு செய்தார்

சுற்றுப்பயண நிர்வாகிகள்!
இந்த தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தின் நிர்வாகி களாக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக் குமார், இரா. குணசேகரன், பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம்,கழக துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில மாணவர் கழகச் செயலாளர் இரா.செந்தூரபாண்டி, மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேசு, தலைமைக் கழக அமைப்பாளர் ஆத்தூர் சுரேசு, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்டோர் இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

Ad imageAd image
குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்க அழைப்பிதழை
சந்தா சேர்ப்பு பொறுப்பாளர் நியமனம்
கும்பகோணம் வருகை
மும்மொழித் திட்டத்தை ஒப்புக்கொண்டால்தான் மாநிலத்திற்குக் கல்வி நிதியைத் தருவோம் என்று கூறுவதா? ஒன்றிய பி.ஜே.பி. அரசு நடத்துவது கமிஷன் ஏஜெண்ட் வேலையா? பேர அரசியலா?
தமிழர் தலைவரிடம் வாழ்த்துப் பெற்றார் தமிழறிஞர் மோகன சுந்தரம்
TAGGED:நாகப்பட்டினம்மயிலாடுதுறை
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?