பத்மசிறீ நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் நினைவு நாளில் (12.4.1993) அவரது நினைவைப் போற்றுவோம்

viduthalai
1 Min Read

பிறப்பு : 12.10.1912 நெய்யாடுபாக்கம் தந்தை : துரை சாமி தாயார் : சாரதாம்பாள் துணைவர் : காந்தம்மா
தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழத்தின் துணைவேந்தராக இரண்டு முறை பொறுப்பு வகித்தார். அதற்கு முன்பு தமிழ்நாடு அரசின் கல்வி ஆலோசக ராகவும், பொதுக்கல்வி இயக்குனராகவும் பல காலம் சிறப்பாக பணியாற்றினார்.
1954 ஆம் ஆண்டு சுந்தரவடிவேலு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவி ஏற்றார். அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராசருடன் இணைந்து பல திட்டங்களை செயல்படுத்தினார். இவற்றுள் முன்னு ரிமை வகிப்பது இலவசக் கல்வி, இலவசச் சீருடைத் திட்டம் மற்றும் இலவச மதிய உணவுத்திட்டங்கள் ஆகும்.
சுந்தரவடிவேலு அவர்கள் பெரியவர்களுக்காக 30 நூல்களையும், சிறியவர்களுக்காக 13 நூல்களையும் ‘ வள்ளுவர் வரிசை ‘ என்னும் தலைப்பில் எழுதியுள்ளார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை மூன்று தொகுதி களாக எழுதி வெளியிட்டுள்ளார்.
சிறப்பாக தந்தை பெரியார் அவர்களைப் பற்றி ‘புரட்சியாளர் பெரியார்’ என்ற அரிய நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *