டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்

Viduthalai
1 Min Read

அரசியல்

புதுடில்லி, செப்.19 டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் விழாவை மாணவர்கள் சிறப்பாகக் கொண்டாடினர். 

பிர்சா அம்பேத்கர் பூலே மாணவர் அமைப்பின் ஒருங் கிணைப்பில் ஜே.என்.யு. பேராசிரியர் அஜித் கன்னா, தந்தை பெரியார் பிறந்தநாள் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். வட இந்தியாவில் அண்ணல் அம்பேத்கரின் கருத்துகளுடன், தந்தை பெரியாரின் கருத்துகளும் இணையும் போது இந்திய மக்கள் அனைவருக்கும் அது மிகப்பெரிய நன்மை பயக்கும் என்றும் அவர் கூறினார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் சங்கத்தின் சுபாஷிணி, தமிழ்நாடு அரசின் சமூக நீதி நாள் உதியேற்பை முன்மொழிய, வட இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட பலரும் சமூகநீதி உறுதி யேற்பை ஏற்றுக் கொண்டனர் 

சிறப்புரையாற்றிய அஜித் கன்னா, ”ஜாதிகள் ஒழிய வேண்டும் ஏன்?” என்ற தந்தை பெரியாரின் நூலை ஆங் கிலத்தில் மொழி பெயர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *