வறட்சி…
பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை பொதுவாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். அதன் அளவு 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தால் ‘சூப்பர் எல் நினோ’ என்று அழைக்கப்படுகிறது. இந்த எல் நினோ தாக்கம் ஏற்படும் போது இந்தியாவில் வறட்சி ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தொடக்கம்…
தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்.
உத்தரவு
மீனவர்களின் அவல நிலையை கருத்தில் கொண்டு இந்தியா – இலங்கை கூட்டு பணிக்குழு கூட்டத்தை ஒன்றிய அரசு விரைவாக கூட்ட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துவரி…
நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலாக மொத்தம் ரூ.1,800 கோடி சொத்துவரியை சென்னை மாநகராட்சி வசூலித்துள்ளது. இதேபோல, தொழில் வரி வசூலிக்க ரூ.550 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலை யில், ரூ.565 கோடி வசூலாகியுள்ளது என வருவாய்த் துறை அதிகாரிகள் தகவல்.
உத்தரவாதம்
நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும் வரை காங்கிரசிடம் இருந்து ரூ.3,567 கோடி வரி பாக்கியை வசூலிக்க கட்டாய நடவடிக்கை எதுவும் எடுக்க மாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் வருமான வரித் துறை உத்தரவாதம் அளித்துள்ளது.
பறிமுதல்
நாடாளுமன்ற தேர்தல் தேதி மார்ச் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து 31ஆம் தேதி வரை ரூ.109.76 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் ஆணை யம் தெரிவித்துள்ளது.
அறிமுகம்
இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங் களிலும் யு.பி.அய். மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
செய்திச் சுருக்கம்
Leave a Comment