திரிபுரா பார் கவுன்சில் தேர்தல்: இடதுமுன்னணி – காங்கிரஸ் வெற்றி

1 Min Read

அகர்தலா, மார்ச் 28- திரிபுரா பார் கவுன்சிலுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் பாஜக அணியினர் பெரும் தில்லுமுல்லுகளைச் செய்ய முயன் றும், இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் ஆதரவு பெற்ற அணி வெற்றி பெற்றது.

தலைவராக மிருணாள் காந்தி பிஸ் வாஸ் மற்றும் செயலாளராக கவுசிக் இந்து ஆகிய இருவரும் தேர்வு செய்யப் பட்டனர். இருவருமே இடது முன் னணி மற்றும் காங்கிரஸ் ஆதரவு அணியைச் சேர்ந்தவர்களாவர். துணைத் தலைவராகப் பாஜக ஆதரவு பெற்ற சுப்ரதா தேப்நாத் தேர்வானார்.
17 பேர் செயற்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். அதில் 9 பேர் இடது முன்னணி மற்றும் காங்கி ரஸ் அணியிலிருந்தும், 8 பேர் பாஜக ஆத ரவு அணியிலிருந்தும் வெற்றி பெற்றுள் ளனர். மக்களவைத் தேர்தல் நடக்கவி ருப்பதால், பார் கவுன்சில் தேர்தலில் பெரும் வெற்றியைக் காட்டி விட வேண்டும் என்று பாஜக பெரும் முயற்சி செய்தது. திரிபுராவில் மக்கள வைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 மற்றும் 26 தேதிகளில் நடைபெற வுள்ள நிலையில், பார் கவுன்சில் தேர் தல் முடிவு பாஜகவுக்கு பின்னடை வாகக் கருதப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *