பெண்களுக்கு எதிரான கொடுமைகள் 2 மடங்கு உயர்வு

viduthalai
3 Min Read

மோடி ஆட்சியில் 35 லட்சம் பாலியல் கொடூர வழக்கு!

புதுடில்லி,மார்ச் 27- பிரதமர் மோடி தலைமையிலான ஆட் சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர் பாக 35 லட்சம் வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கடும் விமர்சனம் செய்துள்ளது.
ஒன்றிய மகளிர் நலத்துறை அமைச்சகத்தின் தோல்வி குறித்து 25.3.2024 அன்று காங்கிரஸ் பட்டி யலிட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய் ராம் ரமேஷ் இது தொடர்பாக கூறியிருப்பதா வது:
கடந்த 10 ஆண்டுகளில் பெண் கள் மற்றும் குழந்தைகள் மேம் பாட்டு அமைச்சகத்தின் மிகப் பெரிய தோல்வியை சந் தித்துள்ளது. பெண்களின் பாதுகாப்பு, வளர்ச்சி யின் புதிய சகாப்தம் வரும் ஜூனில் காங்கிரஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு தொடங் கும்.

அப்போது பெண்களுக்கான 10 ஆண்டுகால அநீதி காலத்தை முடிவுக்குக் கொண்டு வரும். ஒன்றிய பாஜக அரசின் ‘பெண் சக்தி’ முழக் கங்கள் உண்மையான நடவடிக்கை யாக இல்லாமல் வெற்று வார்த்தை களாகவே உள்ளன. 10 ஆண்டுக ளாக இந்தியா முழுவதும் பெண் கள் தாக்கப் படும்போது அமைச்சர் ஸ்மிருதி இரானி அமைதியாக இருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்களில் நடக்கும் குற்றங்களுக் காக மட்டுமே விழித்துக் கொண் டிருக்கிறார். அவரது அமைச்சகத் திற்கு ஒதுக்கப் பட்ட நிதி திசை திருப்பப்படுகிறது. இவை மட்டு மல்ல பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது.

கடந்த 2014 முதல் 2022 வரை என்சிஆர்பி தகவல் அடிப்படை யில் பார்த்தாலே பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பெண்க ளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சுமார் 35 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் பெண் களுக்கு எதிரான குற்றங்கள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2012இல் 2.4 லட்சம் வழக்குகள் பதிவான நிலையில் 2022இல் 4.5 லட்சமாக உயர்ந்து விட்டது. 2017இல் போக்சோ வழக்குகள் 32,600 பதிவாகி இருந்தன. ஆனால் 2022இல் 64,400 வழக்குகள் பதிவாகி உள்ளன.

5 ஆண்டுகளில் போக்சோ வழக்குகள் இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது. இதுதவிர 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு பெண்களின் பாது காப்பை உறுதி செய்யும் முயற்சிகளை செயல் படுத்த நிர்பயா நிதியை அமைத்தது.
ஆனால் மோடி ஆட்சி அமைந்த பிறகு மகளிர் அமைச் சகம் அந்த நிதியைப் பயன்படுத் தத் தவறிவிட்டது. 2022 வரை வெறும் 33 சதவீதம் நிதி மட் டுமே பயன்படுத்தப்பட்டது. இவை மட்டுமல்ல பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி போராட்டம் நடத்திய பெண் மல்யுத்த வீரர் களை பாஜக மிருகத்தனமாக அடக்கியது.
குஜராத் பில்கிஸ் பானு பலாத் கார குற்றவாளிகளை அவர்கள் விடுவித்தனர். கதுவா முதல் ஹத் ராஸ் வரை, பாஜக இந்தியாவை பெண்களுக்குப் பாதுகாப்பற்றதாக மாற்றியுள்ளது.
மணிப்பூரில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பலாத்கார மற்றும் பெண்கள் மீதான தாக்குதல் தகவல் கள் வெளிவரும் அதே வேளையில், பிரதமர் மோடியும், மகளிர் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரா னியும் முற்றிலும் செயலற்றவர்க ளாகவே உள்ளனர்.

இந்தப் பிரச்சினைகளில் பேசக் கூட முடியவில்லை என்றால், பெண்கள் மற்றும் குழந் தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி என்ன தான் செய்கிறார்? மேலும் பாஜக அதிகளவில் ஆண் ஆதிக்கத்தை புகுத்தி உழைக்கும் பெண்களுக்கு விரோதமான சூழலை உருவாக்கியுள்ளது.
2022-2023ஆம் ஆண்டில், பெண் தொழிலாளர் விகிதம் வெறும் 8.8% ஆக இருந்தது. இது 90% க்கும் அதிகமான உழைக்கும் வயதுடைய பெண் கள் வேலை யைத் தேடவில்லை என்பதைக் குறிக்கிறது.
இது கிட்டத்தட்ட 8 ஆண்டு களில் மிகக் குறைவு. ஸ்மிருதி இரானியின் திறமையின்மை கார ணமாக, கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைக ளுக்கு பேரழிவு ஏற்பட் டுள்ளது.
ஜூன் மாதம் பொறுப்பேற்கும் காங்கிரஸ் தலைமையி லான அரசு பெண்களுக்கு எதிரான 10 ஆண்டு கால அநியாய காலத்தை முடிவுக் குக் கொண்டுவரும். மேலும் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு, செழிப்பு, வளர்ச்சிக்கான புதிய சகாப்தத்தைத் தொடங்கும். -இவ் வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *