விநாயகர் சதுர்த்தி பி.ஜே.பி. எம்.எல்.ஏ. கூட்டத்தில் தடியடி

1 Min Read

பெலகாவி, செப்.25 பாரதீய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர், விட்டல் ஹலேகர் நடத்திய,கூட்டத்தில் கல் வீசப்பட்டதால், காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இவரது சொந்த ஊர் கானாபுரா அருகே உள்ள டோபினஹட்டி கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி, பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சிலை கரைக்க எடுத்து செல்லப்பட்டது அப்போது சிலையைத்தூக்கிகொண்டு சென்ற சிலர் சிறுபான்மை மதத்திற்கு எதிராக கூச்சல் போட்டுக்கொண்டே இருந்தனர் இதற்கு சிறுப்பான்மையினர் எதிர்ப்பு தெரிவிக்கவே அங்கு தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் கிராமத்தில் பரபரப்பு நிலவியது.  இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் விட்டல் ஹலேகர் தலைமையில், சமாதான கூட்டம் நடந்தது. அப்போது கூட்டத்தில் இருந்து சிலர் கல் வீசினர். அந்த கல் சட்டமன்ற உறுப்பினர், அருகில் சென்று விழுந்தது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், இருதரப்பினரையும் தடியால் அடித்து விரட்டினர். மோதல், கல்வீச்சு தொடர்பாக 40 பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *