டில்லி மதுபான கொள்கை விவகாரத்தில் சிக்கிய நிறுவனத்திடம் இருந்து பா.ஜ.க.-வுக்கு கோடி கோடியாக தேர்தல் பத்திர நிதி

1 Min Read

புதுடில்லி, மார்ச் 24-  டில்லி மதுபான வழக்கில் அப்ரூவராக மாறிய சரத்ரெட்டியின் நிறுவ னம் பாஜகவுக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்தது தெரிய வந்துள்ளது.
கடந்த 2022 நவம்பரில் கிuக்ஷீஷீதீவீஸீபீஷீ றிலீணீக்ஷீனீணீ நிறுவனத்தின் இயக்குநர் சரத்ரெட்டி கைதான நிலையில், அதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் ரூ‌.5 கோடி மதிப்பி லான தேர்தல் பத்திரங்களை வாங்கி பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளது.
மேலும் கடந்த 2023 ஜுன் மாதத்தில் அப்ரூவராக மாறுவ தாக சரத்ரெட்டி கூறிய பிறகு, கிuக்ஷீஷீதீவீஸீபீஷீ றிலீணீக்ஷீனீணீ நிறுவனம் மேலும் ரூ.25 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கி பாஜகவுக்கு நன்கொடை அளித் ததும் தெரியவந்துள்ளது அப் ரூவராக மாறுவதாக அறிவித்த சரத்ரெட்டி தற்போது பிணை யில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுபானக் கொள்கை விவ காரத்தில் சிக்கிய நபரிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் பாஜக நன்கொடையாக பெற்றிருப்பதன் மூலம் பாஜக-வின் கொள்கை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பியுள் ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *