சேலம், மார்ச் 24: வேடந் தாங்கல் பறவைகள்போல பாமக அடிக்கடி கூட்ட ணியை மாற்றி வருகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக நிர் வாகிகள் ஆலோ சனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கட்சி யின் பொதுச் செயலா ளர் பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேடந்தாங்கல் பறவைபோல பாமக அடிக்கடி கூட்டணியை மாற்றிவருகிறது. ஏரியில் தண்ணீர் நிரம்பி இருக் கும்போது பறவைகள் வரும். தண்ணீர் வற்றி னால் சென்றுவிடும்.
அதுபோலத்தான் ராம தாசும். ஏற்கெனவே பாஜ கவுக்கு பூஜ்ய மதிப்பெண் கொடுப்பேன் என்று கூறியிருந்த ராமதாஸ், தற் போது பாஜக கூட்டணி யில் இணைந்து, பாஜக கூட்டணி வெல்லும் என் கிறார். ஒவ்வொரு தேர்த லிலும் ஒரு கட்சியை ஆத ரிக்கும் கட்சிதான் பாமக.
அதிமுக கூட்டணியை நம்பி இல்லை. கூட்ட ணிக்கு கட்சிகள் வந்தால் வரவேற்போம். வரா விட்டால் சொந்த பலத் தில் தேர்தலை சந்திப் போம். எனவே, கூட்ட ணியை நம்பி அதிமுக இல்லை. மக்களவைத் தேர்தலில் ஒரு ரூபாய்கூட செலவு செய்ய மாட் டோம் என்று அண்ணா மலை தெரிவித்துள்ளார். அவர் செலவு செய் கிறாரா, இல்லையா என் பதை பின்தொடர்ந்து சென்று பார்த்தால்தான் தெரியும். இவ்வாறு அவர் கூறுவது தவறான கருத்து. அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்தந்த கட்சியினர் செலவு செய் வார்கள். குறிப்பிட்ட அளவு செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணை யம் நிர்ணயித்துள்ளது. .
இவ்வாறு பழனிசாமி கூறினார்.
பாமக வேடந்தாங்கல் பறவை : எடப்பாடி பழனிச்சாமி தாக்கு
Leave a Comment