விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், து. ரவிகுமார் ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் கே. சுப்பராயன், வை.செல்வராஜ் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தனர். வேட்பாளர்கள் அனைவருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் புத்தகங்களை வழங்கி வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். பாலாஜி, ஷாநவாஸ், சிந்தனைச்செல்வன், பனையூர் பாபு, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த மு. வீரபாண்டியன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (சென்னை பெரியார் திடல் 19.3.2024)