“உயரத்தை அடைவதற்கு உறுதுணை பெற்றோரே!” – துப்பாக்கி சுடும் வீராங்கனை சுமன் குமாரி!

viduthalai
3 Min Read

பெற்றோர்கள் தங்களது மகளின் விருப்பு, வெறுப்புகளைக் கேட்டறிந்து அவர்களது இலக்கை நோக்கிப் பயணிக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை சுமர் குமாரி தெரிவித்துள்ளார்.இமாச்சலப்பிரதேசம், மண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமன் குமாரி. இவரது தந்தை தினேஷ் குமார் தாக்கூர். எலக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார். தாய் மாயா தேவி. சுமன் குமாரிக்கு ஒரு சகோதரர் மற்றும் சகோதரி உள்ளனர்.2019ஆம் ஆண்டு எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கான தேர்வினை இவர் எழுதினார். அதில் தேர்ச்சி பெற்ற இவர் 2021இல் நடைபெற்ற ஆட்சேர்ப்பில் எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) இணைந்தார். சமீபத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற காவல் உதவி ஆய்வாளர் தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக சுமன் குமாரி(28) எல்லைப் பாதுகாப்புப் படையின் காவல் உதவி ஆய்வாளர் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் இந்தூரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின், மத்திய ஆயுதங்கள் மற்றும் போர் திறன் பள்ளியில் (CSWT) எட்டு வார துப்பாக்கி சுடும் பயிற்சியை முடித்து பயிற்சியாளர் தரம் பெற்றுள்ளார்.

இமாச்சலப் பிரதேசம், மண்டி மாவட்டத்தை சேர்ந்தவர் சுமன் குமாரி. இவரது தந்தை தினேஷ் குமார் தாக்கூர், எலக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார். அவரது தாயார் மாயா தேவி. இவருக்கும் ஒரு சகோதரர் மற்றும் சகோதரி உள்ளனர். 2019 ஆம் ஆண்டு எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கான தேர்வினை இவர் எழுதியுள்ளார். 2021இல் நடைபெற்ற ஆட்சேர்ப்பில் எல்லைப் பாதுகாப்புப் படையில் இணைந்துள்ளார். சுமன் குமாரி, பஞ்சாபில் தனது படைப்பிரிவுடன் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், எல்லைக்கு அப்பால் இருந்து துப்பாக்கி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். அதன் பிறகு, துப்பாக்கி சுடுதல் பயிற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். சுமன் குமாரியின் மன உறுதியைப் பார்த்து, துப்பாக்கி சுடுதல் பயிற்சி பற்றிய மேற்படிப்பை மேற்கொள்வதற்கு அவருடைய மேலதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

அதன்படி, 56 ஆண்கள் கொண்ட துப்பாக்கி சுடுதல் பயிற்சியில், தனது துணிச்சலை வெளிப்படுத்தி பயிற்சியை முடித்து, எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக தரம் பெற்றுள்ளார் சுமன் குமாரி. இவர், ஆயுதமின்றி போரிடும் குழுவிலும் தகுதி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பயிற்சி பெற்ற துப்பாக்கி சுடும் வீரர், SSGஉட்பட மற்ற துப்பாக்கிகளுடன், மூன்று கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் இருந்து எதிரிகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் தினமான மார்ச் 8 அன்று சுமன் குமாரி தனது குடும்பத்தைப் பற்றியும், தான் கடந்து வந்த பாதைகள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். “நான் கடந்த 2021ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்புப் படையில் சேர்ந்தேன் மற்றும் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் எனது அடிப்படை பயிற்சியை முடித்தேன். அதன்பின், எனக்கான பிரிவு ஒதுக்கப்பட்டது. தற்போது பஞ்சாப்பில் பணிபுரிந்து வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் எனது பிரிவில் பல்வேறு பொறுப்புகள் வழங்கப்படும். இந்த முறை நான் துப்பாக்கி சுடும் பயிற்சியைத் தேர்வு செய்தேன்.எல்லைக்கு அப்பால் உள்ள துப்பாக்கி தாக்குதல்களின் அச்சுறுத்தலை மனதில் கொண்டு துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட நான் முடிவு செய்தேன். பயிற்சி பெறுபவர்களில் நான் மட்டுமே பெண். எனக்கு எப்போதும் எனது குடும்பம் ஆதரவாக இருந்துள்ளது.

நான் எல்லைப் பாதுகாப்புப் படைக்குத் தேர்வான போது, உன்னால் அதைச் சமாளிக்க முடியாது. அது மிகவும் கடினமான ஒன்று என எனது உறவினர்கள் கூறினர். ஆனால் எனது பெற்றோர் என்னை ஆதரித்தனர். துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொள்ள விரும்புகிறேன் எனக் கூறிய போதும் எனது முடிவைத் தொடர்ந்து ஆதரித்தனர். எனது மகிழ்ச்சியே அவர்களது மகிழ்ச்சி என நினைத்தனர். ‘ஸ்னைப்பர்’ பயிற்சிக்கு உடல் வலிமையை விட மன வலிமை மிகவும் அவசியம். இந்த பயிற்சியின் போது, நிறையச் சவால்களை எதிர்கொண்டேன். சில நேரங்களில் என்னால் சில விடயங்களைச் செய்ய முடியாமல் போனது. ஆனால் எனது ஆண் சகோதரர்கள் அதனை எளிதில் செய்தார்கள்” என்றார்.
பெண்கள் அதிகம் பேசப்படாத இந்த ஆண் ஆதிக்கச் சமூகத்தில் பெண்கள் பேசுவது மிக முக்கியம். ஒவ்வொரு பெண்ணும் அவர்களது இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும். மேலும், பெற்றோர்களுக்கு நான் கூற விரும்புவது, அவர்களது மகளை ஆதரிக்க வேண்டும். அவர்களின் விருப்பு வெறுப்புகளைக் கேட்டறிந்து அவர்களது இலக்கை நோக்கிச் செல்ல அவர்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *