சந்திராயன் -4 திட்டம் நிலவின் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவர முயற்சி

2 Min Read

தமிழ்நாடு

சென்னை, நவ. 22-  சந்திரயான்-4 திட் டத்தில் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி, அதன் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளைச் சேகரித்து மீண்டும் பூமிக்கு அவற்றை கொண்டுவர இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்து அனுப்பிய சந்திர யான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண் டர் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங் கியது.

அடுத்த கட்டமாக ஜப்பானுடன் சேர்ந்து சந்திரயான்-4 திட்டத்தைச் செயல்படுத்த இந்தியா முடிவு செய் துள்ளது. சந்திரயான்-4 திட்டம் லூபெக்ஸ் எனும் பெயரில் செயல்படுத் தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் ரோபோட் தொழில் நுட்பத்திலான ரோவர் மற்றும் லேண் டரை நிலவுக்கு அனுப்பி ஆய்வு செய்வ துடன், அதன் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளை சேகரித்து பூமிக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தக வல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானி கள் சிலர் கூறும்போது, “சந்திரயான்-4 திட்டத்தில் லேண்டரை இந்தியாவும், ரோவரை ஜப்பானும் வடிவமைக்க உள்ளன.

இவற்றின் ஆயுட்காலம் 6 மாதங் களாகும். இது முந்தைய திட்டங் களைவிட சவாலானதாகும். ஏனெனில், விண்கலத்தை நிலவில் தரையிறக்கி மாதிரிகளைச் சேகரித்து, பின்னர் மீண்டும் பூமிக்குக் கொண்டுவர வேண் டும்.

இதற்காக 4 விதமான கலன்கள் விண்கலத்தில் இணைக்கப்பட உள் ளன. மேலும், அதிலுள்ள ரோவரின் எடை மட்டும் 350 கிலோவாகும். ரோவரில் நிலவின் மேற்பரப்பில் துளை யிட வசதியாக நவீன இயந்திரங்கள் இடம்பெறும். இதன்மூலம் நிலவில் உள்ள மணற் துகள்கள், நீர் மூலக் கூறுகள் போன்ற மாதிரிகளை எளி தாகச் சேகரிக்க முடியும்.

அதேபோல், சந்திரயான்-3 திட்டத் தில் இடம்பெற்ற ரோவர் நிலவின் மேற்பரப்பில் 500 மீட்டர் சுற்றளவில் தான் வலம் வந்து ஆய்வு செய்தது. ஆனால், சந்திரயான் 4இ-ல் அனுப்ப வுள்ள ரோவர் அதிகபட்சம் ஒரு கி.மீட்டர் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. அனைத்துப் பணிகளையும் முடித்து அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்துக்கான முதற்கட்ட சோதனையை நடத்தி முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. நிலவின் இருள் நிறைந்த தென்துருவப் பகுதிகளை முழுமையாக ஆராய்வதே சந்திரயான்-4 திட்டத்தின் நோக்கமாகும்” என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *