Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Font ResizerAa
  • Latest News
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Font ResizerAa
Search
  • Latest News
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
ஊசி மிளகாய் > ‘‘ஊசிமிளகாய்” தி.மு.க.வின் ‘‘அனுகூல சத்ரு” அண்ணாமலை!
ஊசி மிளகாய்

‘‘ஊசிமிளகாய்” தி.மு.க.வின் ‘‘அனுகூல சத்ரு” அண்ணாமலை!

Last updated: November 28, 2023 1:09 pm
Viduthalai
2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெரியார் நாள்காட்டி 2026  இப்போது விற்பனையில்!

தந்தை பெரியார், அவரது தொண்டர்கள், தோழர்கள், இயக்க வரவுகள், உறவுகளுக்கு எல்லாம் ஓர் அருமையான அறிவுரை கூறுவார்:

‘‘நம் மாநாடுகள், இயக்கத்திற்கு விளம்பரத்திற்கென்று ஒரு காசும் செலவு செய்யாதீர்கள்; நம்ம (இன) எதிரியே நம்மை அதிகமாக விளம்பரப்படுத்துவான்; அதனால் விளம்பரம் செய்யவில்லையே என்று விசனப்படாதீர்கள், சற்றுப் பொறுமையாக இருங்கள்” என்பார்.

இன்றுவரை அது எவ்வளவு உண்மை என்பதை நாள்தோறும் பார்த்து வருகிறோம் பல நிகழ்வுகள் வாயிலாக!

பா.ஜ.க.வின் தமிழ்நாட்டு தலைவர்களாக பலர் வந்தும் சொந்தமாகக் காலூன்ற முடியாத அக்கட்சிக்குக் ‘கால்’ தேடுவதும், ‘‘மக்கள் எங்கே, மண் எங்கே” என்று தேடி ஓடுவதும் வாடிக்கையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது!

உண்மையைத் தவிர உறுதியாக மற்றதை – தினசரி ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்துவிடுவதே ‘‘புண்-நாக்கு” அய்.ஏ.எஸ். ஓய்வாளர் அண்ணாமலையின் அன்றாட அனாவசியப் பணி தப்பு, தப்பு, ‘‘அவசியமான” பணி!

Read More

எப்படிப்பட்ட விந்தைச் செய்தி பாருங்கள்! பகுத்தறிவின் பயனா இது?
கருணையே வடிவானவரா கடவுள்?

அவரது தவணை முறை நடைபயணத்தில் தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதாக எண்ணி, நாளும் அதற்கு நல்ல உரம் போடும் பணியை அதன் ‘அனுகூலச் சத்ரு’ அண்ணாமலை தவறாது செய்து வருகிறார்!

தி.மு.க. தொண்டர்களையும், கூட்டணிக் கட்சியினரையும் சோர்வின்றிப் பயணிக்கும் சுறுசுறுப்புத் தேனீக்களாக்கிக் கொண்டே இருக்க இவரது பண்பற்ற சவ(ட)£ல்கள் சங்கு ஊதி வருகின்றன! சங்கநாத சங்கு அல்ல; வேறு வகையில் ஊதப்படும் சங்கு!

தொடக்கூடாத இடத்தில் எல்லாம் தொட்டு, ‘மின்சார அதிர்ச்சியால்’ அவ்வப்போது தடங்கலுக்கு வருந்தாமல், வாய் வீச்சு வக்கணைகள்மூலம் தன் சொந்தக் கட்சிக்காரர்களின் மதிப்பைக்கூட நாளும் இழந்துவரும் பரிதாபத்திற்குரியவராக இருக்கிறார். அதன் அந்தித்தலைவர் அண்ணாமலை!

அ.தி.மு.க.வோடு கூட்டணி இனி ஒருபோதும் இல்லை என்று ‘‘சத்தியம்” செய்ய வைக்கும் அளவுக்கு அதனைச் சீண்டி, தி.மு.க. கூட்டணி வயலுக்கு உரம்போட உதவுகிறார்!

முன்பு பற்றிய கரங்களும், சுற்றிய கட்சிகளும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறி, அதன் தோல்விக்கு அச்சாரம் வாங்கியதுபோல கலகலத்துள்ளன.

வடக்கே உள்ள பா.ஜ.க.வினர் திடீரென்று திகைத்து, ‘இப்படியா!’ என்று வெலவெலத்துப் போய் உள்ளனர்!

கட்சி நடத்துவது வேறு; காவல்துறை பணி போன்றது அல்ல; அங்கே உத்தரவு போட்டே பழக்கம் – சுடுவதற்குக்கூட! ஆனால், நீதி விசாரணை முடிந்து வேலையிழந்து சிறையில் (வாச்சாத்தி தீர்ப்புபோல் ஒரு கண்ணாடி) தனிமையில் சுயபரிசோதனை செய்யும்போதுதான் செய்த தவறு சற்று புரியக்கூடும்!

அரசியல் கட்சி தலைமை, அதிகாரம் எல்லாம் பொதுவாழ்வில் வானவில் தோன்றி மறைவதுபோல – வண்ணங்கள் தெரியும், சில மணித் துளிகளுக்குப் பிறகு, தேடினாலும் தெரியாது!

அண்ணாமலைக்கு சில அக்கிரகார ஏடுகளின் ‘சடகோபம்’ இருப்பதாலேயே, ‘‘மண்ணும் – விண்ணும் தன்னிடம் என்ற மயக்கம்” ஏற்படலாம்.

ஆனால், அவை ‘பொய்யாய், கனவாய், பழங்கதையாய்ப் போய்விடும்’ என்பது அனுபவம் வரலாற்றில் விட்டுச் சென்றுள்ள பாடம்!

‘பல் சான்றோரே, பல் சான்றோரே’, பரிதாபத்திற்குரிய அண்ணாமலைக்குப் பதில் அளித்து உங்கள் பொன்னான நேரத்தை பாழடிக்காதீர்கள்! அவருக்கு வாய்ப்பூட்டு காவிகளாலேயே தயாரிக்கப்பட்டிருக்கிறது; திண்டுக்கல் பூட்டைவிட உறுதிமிக்கது அந்த டில்லிப் பூட்டு, புரிந்துகொள்வீர்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


அய்யோ, சிரிப்புத்தான் வருகுது!
அறிவுச்சூன்யமே, உன் பெயர்தான் ‘குருமூர்த்தியா?’
காலமெலாம் ஓயாத ‘‘வடகலை – தென்கலை சண்டை!’’
அறுபடை (டிசைன்)தான் மிஞ்சும் – அறுவடை (வாக்கு) ஏதும் கிடைக்காது!– ஊசிமிளகாய் –
‘‘ வாய் வீரம் – வக்கணை – வரவழைத்த வளையம்தானே அது?’’
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular Posts

திராவிடர் கழகம்
மானாமதுரையில் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (12.2.2026)
February 13, 2026
திராவிடர் கழகம்
தமிழர் தலைவருக்கு சட்டமன்ற உறுப்பினர், மேனாள் அமைச்சர், மேனாள் மக்களவை உறுப்பினர் அளித்த உற்சாக வரவேற்பு (12.2.2026)
February 13, 2026
திராவிடர் கழகம்
ராமநாதபுரத்தில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க.வையும் – துணை போகும் அ.தி.மு.க.வையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம்! (12.2.2026)
February 13, 2026
மக்களவைத் தலைவர் ஓம்  பிர்லா அறையில் நடந்தது என்ன?  பிரியங்கா காந்தி விளக்கம்
February 13, 2026
இரட்டை என்ஜின் யோக்கியதை இதுதான்! மணிப்பூரில் நீடிக்கும் கலவரம்: வீடுகளுக்கு தீவைப்பு -இணைய சேவை துண்டிப்பு
February 13, 2026
ஒன்றிய அரசைக் கண்டித்து தொழிற்சங்க பணியாளர்கள் பணி புறக்கணிப்புப் போராட்டம் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கைது
February 13, 2026
10% Discount on all books
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

Also Read

‘குட்டீஸ்’க்கு இப்படி மூடத்தன பரப்புரையா?

October 20, 2025

புதிய புளுகுணிப் புரட்டர்கள் புறப்பட்டுள்ளனர், எச்சரிக்கை!

December 21, 2025
திராவிடர் கழகம்
ஊசி மிளகாய்

அந்தோ பரிதாபம், ‘அய்யோ– மலை!’ – ஊசிமிளகாய் –

February 4, 2026
திராவிடர் கழகம்
ஊசி மிளகாய்கவிஞர் கலி.பூங்குன்றன்

”ஊசிமிளகாய்” – எங்கள் ‘‘ஸ்டாலின்”மீது பாயும் ஆர்.எஸ்.எஸ். ஒன்றிய அமைச்சர் அறியவேண்டிய செய்தி!

November 28, 2023
திராவிடர் கழகம்
ஊசி மிளகாய்

அரசியல் இப்படி கோமாளித்தன கூடாரமாகிவிட்டதே! வேதனை! வேதனை!! வெட்கம்!!!– ஊசிமிளகாய் –

June 19, 2025
Previous Next

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Other Links
  • Donate
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?