Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Font ResizerAa
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US

Home » ‘‘ஊசிமிளகாய்” தி.மு.க.வின் ‘‘அனுகூல சத்ரு” அண்ணாமலை!

ஊசி மிளகாய்

‘‘ஊசிமிளகாய்” தி.மு.க.வின் ‘‘அனுகூல சத்ரு” அண்ணாமலை!

Viduthalai
Last updated: November 28, 2023 1:09 pm
Viduthalai
Share
2 Min Read
SHARE

தந்தை பெரியார், அவரது தொண்டர்கள், தோழர்கள், இயக்க வரவுகள், உறவுகளுக்கு எல்லாம் ஓர் அருமையான அறிவுரை கூறுவார்:

‘‘நம் மாநாடுகள், இயக்கத்திற்கு விளம்பரத்திற்கென்று ஒரு காசும் செலவு செய்யாதீர்கள்; நம்ம (இன) எதிரியே நம்மை அதிகமாக விளம்பரப்படுத்துவான்; அதனால் விளம்பரம் செய்யவில்லையே என்று விசனப்படாதீர்கள், சற்றுப் பொறுமையாக இருங்கள்” என்பார்.

இன்றுவரை அது எவ்வளவு உண்மை என்பதை நாள்தோறும் பார்த்து வருகிறோம் பல நிகழ்வுகள் வாயிலாக!

பா.ஜ.க.வின் தமிழ்நாட்டு தலைவர்களாக பலர் வந்தும் சொந்தமாகக் காலூன்ற முடியாத அக்கட்சிக்குக் ‘கால்’ தேடுவதும், ‘‘மக்கள் எங்கே, மண் எங்கே” என்று தேடி ஓடுவதும் வாடிக்கையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது!

உண்மையைத் தவிர உறுதியாக மற்றதை – தினசரி ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்துவிடுவதே ‘‘புண்-நாக்கு” அய்.ஏ.எஸ். ஓய்வாளர் அண்ணாமலையின் அன்றாட அனாவசியப் பணி தப்பு, தப்பு, ‘‘அவசியமான” பணி!

அவரது தவணை முறை நடைபயணத்தில் தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதாக எண்ணி, நாளும் அதற்கு நல்ல உரம் போடும் பணியை அதன் ‘அனுகூலச் சத்ரு’ அண்ணாமலை தவறாது செய்து வருகிறார்!

தி.மு.க. தொண்டர்களையும், கூட்டணிக் கட்சியினரையும் சோர்வின்றிப் பயணிக்கும் சுறுசுறுப்புத் தேனீக்களாக்கிக் கொண்டே இருக்க இவரது பண்பற்ற சவ(ட)£ல்கள் சங்கு ஊதி வருகின்றன! சங்கநாத சங்கு அல்ல; வேறு வகையில் ஊதப்படும் சங்கு!

தொடக்கூடாத இடத்தில் எல்லாம் தொட்டு, ‘மின்சார அதிர்ச்சியால்’ அவ்வப்போது தடங்கலுக்கு வருந்தாமல், வாய் வீச்சு வக்கணைகள்மூலம் தன் சொந்தக் கட்சிக்காரர்களின் மதிப்பைக்கூட நாளும் இழந்துவரும் பரிதாபத்திற்குரியவராக இருக்கிறார். அதன் அந்தித்தலைவர் அண்ணாமலை!

அ.தி.மு.க.வோடு கூட்டணி இனி ஒருபோதும் இல்லை என்று ‘‘சத்தியம்” செய்ய வைக்கும் அளவுக்கு அதனைச் சீண்டி, தி.மு.க. கூட்டணி வயலுக்கு உரம்போட உதவுகிறார்!

முன்பு பற்றிய கரங்களும், சுற்றிய கட்சிகளும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறி, அதன் தோல்விக்கு அச்சாரம் வாங்கியதுபோல கலகலத்துள்ளன.

வடக்கே உள்ள பா.ஜ.க.வினர் திடீரென்று திகைத்து, ‘இப்படியா!’ என்று வெலவெலத்துப் போய் உள்ளனர்!

கட்சி நடத்துவது வேறு; காவல்துறை பணி போன்றது அல்ல; அங்கே உத்தரவு போட்டே பழக்கம் – சுடுவதற்குக்கூட! ஆனால், நீதி விசாரணை முடிந்து வேலையிழந்து சிறையில் (வாச்சாத்தி தீர்ப்புபோல் ஒரு கண்ணாடி) தனிமையில் சுயபரிசோதனை செய்யும்போதுதான் செய்த தவறு சற்று புரியக்கூடும்!

அரசியல் கட்சி தலைமை, அதிகாரம் எல்லாம் பொதுவாழ்வில் வானவில் தோன்றி மறைவதுபோல – வண்ணங்கள் தெரியும், சில மணித் துளிகளுக்குப் பிறகு, தேடினாலும் தெரியாது!

அண்ணாமலைக்கு சில அக்கிரகார ஏடுகளின் ‘சடகோபம்’ இருப்பதாலேயே, ‘‘மண்ணும் – விண்ணும் தன்னிடம் என்ற மயக்கம்” ஏற்படலாம்.

ஆனால், அவை ‘பொய்யாய், கனவாய், பழங்கதையாய்ப் போய்விடும்’ என்பது அனுபவம் வரலாற்றில் விட்டுச் சென்றுள்ள பாடம்!

‘பல் சான்றோரே, பல் சான்றோரே’, பரிதாபத்திற்குரிய அண்ணாமலைக்குப் பதில் அளித்து உங்கள் பொன்னான நேரத்தை பாழடிக்காதீர்கள்! அவருக்கு வாய்ப்பூட்டு காவிகளாலேயே தயாரிக்கப்பட்டிருக்கிறது; திண்டுக்கல் பூட்டைவிட உறுதிமிக்கது அந்த டில்லிப் பூட்டு, புரிந்துகொள்வீர்!

”ஊசிமிளகாய்”
காலமெலாம் ஓயாத ‘‘வடகலை – தென்கலை சண்டை!’’
‘‘ வாய் வீரம் – வக்கணை – வரவழைத்த வளையம்தானே அது?’’
அறுபடை (டிசைன்)தான் மிஞ்சும் – அறுவடை (வாக்கு) ஏதும் கிடைக்காது!– ஊசிமிளகாய் –
‘‘ஊசிமிளகாய்” – சமய அறிஞர் சுகி.சிவம் பேட்டியின் முத்தாய்ப்பு!
Share This Article
Facebook Whatsapp Whatsapp LinkedIn Reddit Telegram Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

You Might Also Like

ஊசி மிளகாய்
ஊசி மிளகாய்

‘‘ஊசிமிளகாய்” ”தமிழ்நாட்டில் பிரதமர் மோடி வரவேற்புக் கூட்டம் – ரகசியம் இதோ!”

January 25, 2024
ஊசி மிளகாய்
ஊசி மிளகாய்

‘ஏமண்டி, வெங்கடாஜலபதிக்கே இப்படி ஒரு ‘லட்டு’ சோதனையா?’

September 23, 2024

அட ஜோதிடப் பைத்தியங்களே, படியுங்கள் கீழே!

December 19, 2023
ஊசி மிளகாய்
ஊசி மிளகாய்கவிஞர் கலி.பூங்குன்றன்

‘‘ஜெய்(பூரி) ஜெகன்நாத்’’ ஒய் (why) கடவுள் சிலை விழுந்து விபத்து?

July 10, 2024
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?