நாடு முழுவதும் அனைத்து பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு நிலையான கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும்

viduthalai
2 Min Read

ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

புதுடில்லி, மார்ச் 2 நாடு முழுவதும் உள்ள பெருநகரங்கள், நகரங்கள், சிறு நகரங்களில் சிகிச்சைக்கான நிலையான கட்டணத்தை அமல் படுத்த வேண்டும், இல்லையென் றால் நாங்கள் அமல்படுத்துவோம் என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதி மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருத்துவமனைகளுக்கான ஒன்றிய அரசு விதிமுறைகள் 2012- 9ஆ-வது பிரிவின் கீழ் சிகிச்சை களுக்கு நோயாளிகளிடமிருந்து வசூலிக்கும் கட்டணத்தை நிர் ணயம் செய்ய ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பொது வாழ்வில் வெளிப்படைத்தன்மைக் கான வீரர்கள் அமைப்பு என்ற தொண்டு நிறுவனம் உச்ச நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தது. இந்த விதிமுறைகள் படி அனைத்து பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளும், தாங்கள் அளிக்கும் சிகிச்சைகளுக்கான கட்டணத்தை, நோயாளிக்கும் தெரியும் வகையில் வெளியிட வேண்டும். ஆனால் எந்த மருத் துவமனையும் இந்த விதிமுறை களை பின்பற்றுவதில்லை.

தங்கள் விருப்பத்திற்கு நோயாளிகளிடமிருந்து கட்ட ணம் வசூலிக்கின்றன. கரோனா பரவல் காலத்தில் அதற்கான சிகிச்சைக்கு ஒன்றிய அரசு கட்டணத்தை நிர்ணயித்தது. மற்ற சிகிச்சைகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்வதில் மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை என்றால், ஒன்றிய சட்டங்களின் கீழ் ஒரே மாதிரியான கட்டணத்தை வசூ லிக்க ஒன்றிய அரசு தனது அதி காரத்தை பயன்படுத்த முடியும் என மனுதாரர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

கண்புரை அறுவை சிகிச்சை:
கண்புரை அறுவை சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.10,000 செலவாகிறது, தனியார் மருத்துவமனைகளில் ரூ.30,000 முதல் ரூ.1,40,000 வரை செலவா கிறது. இந்த வித்தியாசம் கண்டனத் துக்குரியது. மருத்துவமனைகளுக் கான ஒன்றிய அரசின் விதி முறைகள் சட்டம் கொண்டு வரப் பட்டு 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இதை ஒன்றிய அரசால் இன்னும் அமல்படுத்த முடிய வில்லை. பெருநகரங்கள், நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் சிகிச் சைகளுக்கான நிலையான கட்ட ணத்தை மாநிலங்களுடன் பேசி நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஒரு மாதம் கெடு: ஒன்றிய, மாநில சுகாதாரத் துறை செயலா ளர்கள் கூட்டத்தை கூட்டி சிகிச்சைகளுக்கான நிலையான கட்டணம் வெளியிடுவதை உறுதி செய்ய ஒரு மாதத்துக்குள் நடவ டிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சினைக்கு தீர்வு காண ஒன்றிய அரசு தவறினால், ஒன்றிய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நிலையான கட்டணங்களை அமல்படுத்தவது பற்றி நாங்கள் பரிசீலிப்போம். ஒரே மாதிரியான கட்டணங்களை மாநில அரசுகள் நிர்ணயிக்க வில்லை என்றால், ஒன்றிய சட்டங் களை பயன்படுத்துங்கள். இவ் வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *