நீதிபதியாக திருடன்

1 Min Read

தானி ராம் மிட்டல் ஒரு பிரபல திருடன். அதே நேரத்தில் வழக்குரைஞர். டில்லி, அரியானா, ராஜஸ்தான் பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கார்களை இவன் திருடி இருக்கிறானாம்.
பொய்யான ஆவணங்களை தயாரித்து ஜஜ்ஜார் நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதியை இரண்டு மாத விடுப்பு கொடுத்து அனுப்பிவிட்டு, தானே நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டு, 2000 குற்றவாளிகளை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளான்.
கடைசியில் உண்மையைக் கண்டுபிடித்து அவனை கைது செய்ய வந்த போது, காணாமல் மறைந்து விட்டான். அவனால் விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளை திரும்ப சிறையில் அடைக்க அரசு தேடிக் கொண்டிருக்கிறது.
போலியாக அரசாங்க அலுவலகங்கள் நடத்துவது மட்டுமல்ல, ஒரு திருடன் நீதிபதியாகவே கூட பணியாற்ற முடியும் – எவ்வளவு திறமையான நிர்வாகம்?!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *