மெட்ரோ ரயில்களில் 84 லட்சம் பேர் பயணம்

1 Min Read

சென்னை, அக்.3 – நடப்பு ஆண்டில் ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பேர் பயணம் செய்தனர். அதேபோல் பிப்ரவரி மாதத்தில் 63 லட்சத்து 69 ஆயிரத்து 282 பேர் பயணம் செய்தனர். மார்ச் மாதத்தில் 69 லட்சம் பேர் பயணம் செய்தனர். அதேபோல் ஏப்ரல் மாதத்தில் 66 லட்சத்து 85 ஆயிரத்து 432 பயணிகள் பயணம் செய்தனர். மே மாதத்தில் 72 லட்சம் பேர் பயணம் செய்தனர். அதேபோல் ஜூன் மாதத்தில் 74 லட்சம் பேர் பயணம் செய்தனர்.

இது போல் பல மடங்கு அதிகரித்து ஜூலை மாதத்தில் 82 லட்சத்து 53 ஆயிரத்து 692 பேர் பயணம் செய்தனர். ஆகஸ்டு மாதத்தில் 85 லட்சத்து 89 ஆயிரத்து 977 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் 84 லட்சத்து 37 ஆயிரத்து 182 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 3 லட்சத்து 37 ஆயிரத்து 586 பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *