மீண்டும் ஒரு பெருமை

Viduthalai
1 Min Read

அரசியல்

சந்திரயான்-3 விண்கலத்தின் தரையிறக்கிக்கலம் (லேண்டர்) நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறக் கப்பட்டதன் மூலம் உலக சாதனை படைத் திருக்கிறது இந்தியா.

 இந்த வெற்றியில் 54 பெண் விஞ்ஞானிகளுக்கும் பங்கு உண்டு என்பது பெருமிதம் தரும் வேளையில் சூரியனை ஆராய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1  விண்கலம் திட்டத்தின் இயக்குநராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிகர் ஷாஜி செயல்பட்டுவருகிறார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த இவர் நெல்லை அரசு பொறியி யல் கல் லூரியில் இளநிலை பொறியியல் படிப்பை முடித்துள்ளார். பிர்லா தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத் தில் மேற்படிப்பை முடித்த இவர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது பணிபுரிந்து வருகிறார். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *