மார்ச் 13ஆம் தேதிக்கு பிறகு மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு

viduthalai
1 Min Read

புதுடில்லி, பிப். 25- நாடாளுமன்ற மக்களவையின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது.இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங் களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்ட மிட்டுள்ளது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட சில மாநில சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இறுதிகட்ட ஆய்வு செய்வதற் காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது.

வரும் மார்ச் 8 அல்லது 9ஆ-ம் தேதி ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் மற்றும் தேர்தல் பணிக்கு தேவையான துணை ராணுவப் படைகள் குறித்து ஒன்றிய அரசின் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்த உள்ளது.
அத்துடன், மார்ச் 12, 13ஆ-ம் தேதி களில் ஜம்மு _- காஷ்மீர் செல்லும் இக்குழுவினர், மக்களவைத் தேர்தலு டன் ஜம்மு-_காஷ்மீர் யூனியன் பிர தேசத்துக்கும் தேர்தல் நடத்தலாமா என்பது குறித்து கள ஆய்வுகளை நடத்த உள்ளனர்.

எனவே, வரும் மார்ச் 13ஆ-ம் தேதிக்குப் பிறகு மக்களவை பொதுத் தேர்தல் குறித்த அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019ஆ-ம் ஆண்டு மார்ச் 10ஆ-ம் தேதி மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான அட்டவணையை தேர் தல் ஆணையம் வெளியிட்டது. இதன் படி, அந்த ஆண்டு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் முடிவுகள் மே 23ஆ-ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.இந்த ஆண்டு சுமார் 97 கோடி பேர் வாக் களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் மக்களவைத் தேர்தலு டன் இணைந்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மாநிலங் களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறஉள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *