அறிவியல் விழிப்புணர்வு பரப்புரை

1 Min Read

அரசியல்

நாகர்கோவில், அக். 4 – குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக அறிவியல் விழிப்புணர்வு பரப்புரை நிகழ்ச்சி நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நடந்தது. 

குமரி மாவட்ட மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமை தாங்கி பரப்பு ரையைத் தொடங்கி வைத் தார். இந்த நிகழ்ச்சியில் காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் திட்டுவிளை ஞா.பிரான் சிஸ், மாவட்ட துணைத் தலைவர் வடசேரி ச.நல்ல பெருமாள் கலை இலக்கிய அணி செயலா ளர் பா.பொன்னு ராசன், மாநகர தலைவர் ச.ச. கருணாநிதி, மாநகர செய லாளர் மு.இராஜசேகர், திராவிட மாணவர் கழக தலைவர் இரா.கோகுல், வடசேரி பகுதி கிளைக் கழக தலைவர் பா.சு.முத்து வைரவன் தோழர்கள் மு.குமரிச் செல்வன் மற் றும் பெரியார் பற்றாளர் கள் பங்கேற்று பொதுமக் களுக்கு பகுத்தறிவு, அறிவியல் விழிப்புணர்வுக் கான துண்டறிக்கைகளை வழங்கினர். பொது மக் கள் ஆர்வமுடன் படித் துப்  பயன்பெற்றனர். கன் னியாகுமரி மாவட்டம் முழுவதும் இந்த பரப் புரை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *