திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூரில் உள்ள பெரியார் சிலைக்கு மின்னொளி அமைத்து தரக்கோரி திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் மாநிலத் தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், காட்டூர் திராவிடர் கழக தோழர்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து பெரியார் சிலைக்கு மாநகராட்சி சார்பில் மின்னொளி அமைத்துக் கொடுத்துள்ளார். 15.2.2024 அன்று கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், காட்டூர் கழக பொறுப்பாளர்கள், காமராஜ், சங்கிலிமுத்து, ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், ஆரோக்கியசாமி ஆகியோர் மேயர் அன்பழகன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பெரியார் புத்தகம் வழங்கினர்.
காட்டூரில் தந்தை பெரியார் சிலைக்கு மாநகராட்சி சார்பில் மின்னொளி
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books