பொதுத் துறையை தனியாரிடம் ஒப்படைக்காதே! பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்து தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

viduthalai
2 Min Read

சென்னை, பிப்.17- புதிய ஓய்வூ தியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங் களை தனியார் மயமாக்கும் முயற்சி யைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தெற்கு ரயில்வே தொழி லாளர் சங்கத்தினர் (எஸ்ஆர்எம்யு) சென்னையில் நேற்று (16.2.2024) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் எஸ்ஆர்எம்யு பொதுச் செயலாளர் என்.கண்ணையா பேசியதாவது:
ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு கடந்த 2004 ஏப்.1ஆ-ம் தேதிமுதல் புதிய ஓய்வூதியத் திட்டம் அமல் படுத்தப்பட்டது.
திட்டம் தொடங்கி 19 ஆண்டு களாகியும், தாங்கள் பெறப் போகும் ஓய்வூதியத் தொகை என்னவென்று தெரியாமலேயே ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, உத்தரவாதத்துடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கும் வகையில் இந்த திட்டத்தை மாற்ற வேண்டும். மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

கட்டமைப்பு வசதிகள்
முதலில் 8 ‘வந்தே பாரத்’ ரயில்களை இயக்கி வந்த ரயில்வே நிர்வாகம், தற்போது அனைத்து வழித் தடங்களிலும் ‘வந்தே பாரத்’ ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. ஆனால், அதற் கேற்ப கட்டுமான வசதிகளை மேம்படுத்தவில்லை. தேவை யான பணியாட்களையும் நிய மிக்கவில்லை.
இதேபோல, சரக்கு ரயில் களை அதிகரிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால், தேவை யான கட்டுமான வசதிகளை ஏற்படுத்தவோ, ஊழியர்களின் எண்ணிக்கையோ அதிகப்படுத் தவோ நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால், ரயில்களின் பராமரிப்பு கேள்விக்குறியாகி, பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத் தும் சூழல்நிலை உருவாகிறது.

தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்
ஒன்றிய அரசின் தனியார் மயக் கொள்கை காரணமாக ரயில்வேயில் 13.5 லட்சம் ஊழி யர்கள் பாதிக்கப்படுவார்கள். வடமேற்கு ரயில்வேயில் 56 ரயில்களும், தெற்கு ரயில்வேயில் 6 ரயில்களும் பாரத் கவுரவ் ரயில் கள் என சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன.
ஆரம்பத்தில் சிறப்பு ரயில்கள் என்று இயக்கினாலும், அவற் றின் கூடுதல் கட்டணத்துக்கு பயணிகள் பழகிய பின்னர், அவற்றை முற்றிலுமாக தனியா ரிடம் ஒப்படைக்கத் திட்டமிட் டுள்ளனர்.

பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள ஊழியர்கள், தெற்கு ரயில்வேயில் அதிகம் பணிபுரி கின்றனர். பிராந்திய மொழி தெரியாதவர்களை பணியில் அமர்த்துவது, மக்களுக்கு இடைஞ்சலாக உள்ளது. எனவே, முன்பு போல ரயில்வே தேர்வு வாரியம் மூலம், பிராந்திய அளவிலான பணி நியமனத்துக்கு தேர்வு நடத்த வேண்டும்.
இதன்மூலம், அந்தந்தப் பகுதி யில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு கண்ணையா கூறி னார். ஆர்ப்பாட்டத்தில், எஸ்ஆர் எம்யு தலைவர் ராஜா சிறீதர் மற்றும் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *