திராவிடர் கழகத்தின் கருத்துரு (31-சி) சட்டமன்றத்தில்

1 Min Read

1992 நவம்பர் 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி இடஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்கு மேல் போகக்கூடாது. தமிழ்நாட்டிலோ 69 சதவிகித இடஒதுக்கீடு. இந்த நிலைமையில் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் மாநில அரசே ஒரு சட்டத்தை நிறைவேற்றலாம் என்ற கருத்துரு (31சி), ஒன்றை அரசுக்குத் தெரிவித்தார். அதன்படி அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழ்நாடு அரசால் கூட்டப்பட்டது. (26.11.1993) திராவிடர் கழகம் கொடுத்த கருத்துருவினை அனைத்துக்கட்சிக் கூட்டம் ஏற்றது. அதன்படி 30.12.1993 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு மறுநாள் (31.12.1993) ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 

————-

ஜாதிப் பெயர்களின் மாற்றம்!

“பறையன்” 1992இல் “ஆதிதிராவிடர்”

“அம்பட்டன்” 1939இல் “மருத்துவர்”

“இடையர்” 1935இல் “யாதவர்”

“செம்படவன்” 1947இல் “பருவத ராஜகுலம்”

“வண்ணான்” 1948இல் “ராஜாக்கர்” 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *