அரசின் பிடிவாதத்தால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு: விலை கடுமையாக உயரும் ஆபத்து

viduthalai
1 Min Read

புதுடில்லி, பிப் 16- ஒன்றிய அரசு கொடுர மனப்பான் மையில் விவசாயிகள் போராட்டத்தை அடக்க முயல்வதால் டில்லியில் அத்தியாவசியப் பொருட் கள் தட்டுப்பாடு மற்று விலை உயரலாம் என டில்லி வர்த்தகர்கள் தெரி வித்துள்ளனர். டில்லி மற் றும் அண்டை மாநிலங்க ளில் உள்ள விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வமா உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி போராட் டம் தொடங்கி உள்ள னர். ஆகவே டில்லி எல்லைகள் மூடப்பட்டு உள்ளன.
இதனால் டில்லிக்குக் காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் போன்ற அத் தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகள் ஆங்காங்கே முடங்கி உள்ளன. ஆகவே டில்லியில் மேற்படி பொருட் களின் விலை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக பெரு வர்த்தகர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.டில்லி நகர மொத்த வர்த்தகர் ஒருவர், ‘தற்போது வரை டில்லி யில் அத்தியாவசிய பொருட் கள் வினியோகம் பெரிய அளவில் பாதிக்கப் பட வில்லை. அத்தியாவசிய பொருட்கள் டில்லிக்குள் வருவதில் சிறிது தாமதம் உள்ளது. இத போராட்டம் நீடித்தால் விலை அதிகரிப் பதைத் தடுக்க முடியாது’ என்று கூறியுள்ளார். விவ சாயிகள் போராட்டத்தால் டில்லியில் உள்ள வணிக வளாக பகுதிக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 75 சத வீதம் வரை குறைந்துள்ள தாகக் கூறப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *