அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை – தமிழ்நாடு அரசு அரசாணை

viduthalai
0 Min Read

சென்னை,பிப்.14- தமிழ் நாட்டி லுள்ள அரசுப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப் படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிப்புக்கான அரசாணையை தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
இதன்படி முதற்கட்டமாக 50 வயதைக் கடந்த 1.06 லட்சம் ஆசிரியர்களுக்கு16 வகையான மருத்துவ பரிசோதனை மேற் கொள்ள அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
ஒரு ஆசிரியருக்கு 1,000 ருபாய் வீதம் நிதி ஒதுக்கி, தேசிய ஆசிரியர் நலநிதியில் இருந்து இச்செலவினத்தை மேற் கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.[

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *