பணிக்காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதி வழங்க ரூ.32 கோடி ஒதுக்கீடு – போக்குவரத்து துறை அரசாணை

1 Min Read

அரசியல்

சென்னை,அக்.8- பணிக்காலத்தில் உயிரிழந்த போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பணப் பலன் வழங்க ரூ.32 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசா ணையில் கூறியிருப்பதாவது:

பணிக் காலத்தில் உயிரிழந்தவர்கள்: கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை போக்குவரத்துக் கழகங்களில் பணிக்காலத்தில் உயிரிழந்தவர்களுக்கான நிதி உதவியை போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகம் கோரியுள்ளது.

அதன்படி, மாநகர போக்குவரத்துக் கழகத் துக்கு ரூ.6 கோடி, விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.1 கோடி, விழுப்புரத்துக்கு ரூ.4.1 கோடி, சேலத்துக்கு ரூ.2.2 கோடி, கோவைக்கு ரூ.3 கோடி, கும்பகோணத்துக்கு ரூ.5.9 கோடி, மதுரைக்கு ரூ.7.3 கோடி, திருநெல்வேலிக்கு ரூ.2.9 கோடி வீதம் ரூ.32.83 கோடியை வழங்க வேண்டும் என முன்மொழிவு பெறப்பட்டுள்ளது.

பங்கு மூலதன உதவி: இதை கவனமாகப் பரிசீலித்த அரசு, பணிக் காலத்தில் உயிரி ழந்த போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்குவதற்காக தமிழ்நாடு போக் குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்துக்கு ரூ.32 கோடியை பங்கு மூலதன உதவியாக வழங்குகிறது. இந்நிறு வனம் போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதியை வழங்கும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *