தென்காசி மாவட்டத்தில் ‘விடுதலை’ சந்தாக்கள் திரட்டும்பணி உற்சாகம்!

Viduthalai
1 Min Read

தென்காசி, நவ. 23 –  தென்காசி மாவட்டத்தில் நேற்று (21.11.2023) தமிழர் தலைவர் அவர்களுக்கு 91-ஆவது பிறந்தநாள் பரி சாக வழங்கப்படும் விடு தலை சந்தாக்கள் சேர்க்கும் பணி மாவட்டத்தலை வர் வழக்குரைஞர் த.வீரன், மாநில மாணவர் கழக துணைச்செயலாளர் சு.இனியன் ஆகியோரு டன் தொடங்கியது.

கழகக் காப்பாளர் டேவிட்செல்லத்துரை அய்ந்து, மாவட்டத் தலைவர் த.வீரன் அய்ந்து, கீழப்பாவூர் பெரியார் பெருந் தொண்டர் ந.இரா மச்சந்திரன் இரண்டு ஓராண்டு சந்தாக்கள், பொதுக்குழு உறுப்பினர் கள் அய்.இராமச்சந்திரன் ஒன்று, பி.பொன்ராசு ஒன்று, மாநில இளைஞ ரணி துணைச்செயலாளர் அ.சவுந்திரபாண்டியன் ஒன்று, பெரியார் பெருந் தொண்டர் பி.ஆர்.கே.அருன் வழியாக ஆ.கார்த் திகேயன் ஒன்று, ஆ.மதி வாணன் ஒன்று, பாவூர் சத்திரம் கண்கொடை விழிப்புணர்வு குழு நிறு வனர் கே.பி.ஆர்.இளங்கோ ஓராண்டு விடுதலை சந் தாக்கள் வழங்கினார்கள்.

சுரண்டையில் மாவட்ட பகுத்தறிவாளர்கழக செயலாளரும்,மாவட்ட திமுக செயலாளருமான வெ. செயபாலன் அவர் கள்  அன்போடு வர வேற்று தமிழர் தலைவர் அவர்களின் உடல்நலன் பற்றி கேட்டறிந்தார்.

புதிதாக தொடங்கப் பட்ட அய்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு ஓராண்டு ‘விடுதலை’ சந்தாக்கள் வழங்கியதுடன் பதினோரு ஒன்றிய செயலாளர்களுக்கு விடுதலை சந்தா பெற்றுத்தருவதாக கூறினார். 

தமிழர் தலைவர் பிறந்த நாளுக்கு விடுதலையில் விளம்பரம் போட வேண்டு மென்றார்.

காப்பாளர் டேவிட் செல்லத்துரை, மாநில ப.க.அமைப்பாளர் கே.டி.சி.குருசாமி, மாவட் டத்தலைவர் த.வீரன், பொதுக்குழு உறுப்பினர் அய்.இராமச்சந்திரன், ஆகியோர் மேலும் பத்து சந்தாக்கள் திரட்டித்தர உறுதியேற்றார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *