உயர்தர பாதுகாப்பை உறுதி செய்யும் குடியிருப்பு திட்டங்களுக்கான ஒப்பந்தம்

1 Min Read

சென்னை, பிப்.5- பொதுமக்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் அதன் கட்டுமானங்களின் உயர்தர பாதுகாப்பை உறுதி செய்ய சென்னை அய்.அய்.டி. நிபுணர்கள் குழு பரிந்துரைகளை செய்து வருகிறது.
அதன் அடிப்படையில் சென்னையில் கட்டுமானத் துறையில் சிறந்து விளங்கும் கட்டுமான நிறுவனமாகிய ஜெயின் ஹவுசிங் அண்ட் கன்ஸ்ட்ரக்சஷன்ஸ்லிமிடெட் சென்னை சாலி கிராமத்தில் உள்ள ஜெயின்ஸ் வெஸ்ட் மின்ஸ்டர் குடியிருப்பு வளாகத்தை இடித்து மீண்டும் கட்டுவதற்கான முடிவை அறிவித்துள்ளது.
இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு தன் உறுதியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தி யுள்ளது. அய்.அய்.டி. மெட்ராஸின் ஆய்வறிக்கை மற்றும் பரிந்துரைக்குப் பிறகு இந்த முடிவு உடனடியாக எடுக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியா முழுவதும் 21,000 அடுக்கு மாடிக் குடியிருப்புகளை ஜெயின் ஹவுசிங் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 200க்கு மேற்பட்ட கட்டுமானத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *