மைசூர், ஜன.26 அயோத்தியில் பாபர் மசூதி யை இடித்து, அங்கு கட்டப்பட்டுள்ள ராமன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள குழந்தை ராமன் சிலைக்கான கல் வழங்கியவர் கருநாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராம்தாஸ் ஆவார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த விவசாயியான ராம்தாஸ் தனது 2.14 ஏக்கர் மொத்த நிலத்தை யும் கருநாடகாவில் ராமன் கோவில் எழுப்ப கொடையாக அளிப்பதாக அறிவித்தார். இந்நிலையில், ராமன் சிலைக்கு கல் கொடை அளித்த ராம்தாஸ் மற்றும் கற்களை பாறையில் இருந்து கடும் சிரமத்துடன் உடைத்துக் கொடுத்த குவாரி குத்தகைதாரர் சிறீனிவாஸ் நடராஜ் ஆகியோர் அயோத்தி ராமன் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்கப்படவில்லையாம்.
ராமன் நெற்றியில் மட்டுமா நாமம், விவசாயிகளுக்கும்தான்!
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books