கூடுதல் கட்டணம்

1 Min Read

 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.36.5 லட்சம் அபராதம் விதிப்பு!

சென்னை, ஜன. 25- கடந்த தீபாவளி விடுமுறை நாட் களை போலவே பொங்கல் விடுமுறை நாட்களிலும் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என எச்ச ரிக்கை விடுக்கப்பட்டு இருந் தது. அதனைத் தொடர்ந்து பெரும்பான்மையான ஆம்னி பேருந்துகள் புகார்க ளுக்கு இடம் அளிக்காமல் செயல்பட்டு வந்தாலும் சில பேருந்துகளில் கூடுதல் கட்ட ணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால் தமிழ்நாடு முழுவதிலும் கடந்த 10.01.2024 முதல் 21.01.2024 வரை சிறப்புக் குழுக்கள் மூலம் தணிக்கை மேற்கொள்ளப்பட் டன.
அதன்படி, மாநிலம் முழு வதிலும் 15,659 ஆம்னி பேருந் துகள் சோதனை செய்யப்பட் டதில் 1,892 பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்து இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இந்த பேருந்துக ளுக்கு ரூ.36.55 லட்சம் அபரா தமாக விதிக்கப்பட்டு வசூலிக் கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *